கீதாஞ்சலி (29) புதுப்பித்திடு காலை ஒளியை! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


களைத்து மயங்கும் இரவில்
சளைத்து,
உன்னை நம்பி
பொறுப்பை எல்லோம் உன்மேல்
போட்டு விட்டு,
நித்திரையில் என்னைத் தள்ளி
புரண்டு போரா டாமல்
பொத்தெனச்
சாய வேண்டும் நான்!
பட்டொளி வீசிப் பறக்கும்
எந்தன்
ஆன்மீக உணர்ச்சியை
தூண்டி விட்டு
புகுத்தக் கூடாது,
தகுந்த பயிற்சி முறை யில்லாமல்
உன்னைத் தொழுதிடத்
துவங்கும் போது!

தேயும் இன்றைய நாள்
சாயும் வேளையில்
கண்களைக்
கிரங்க வைத்து
இரவின் முகத் திரையை
இழுத்து
மூடுவோன் நீ
ஒருவனே!
புதிய மகிழ்ச்சி பூத்துப்
புலரும்
காலைப் பொழுதில்,
விழிக்கும் கண்களுக்கு
ஒளியை ஊட்டிப்
புதுப்பித்து
அடுத்த நாளை
மீண்டும்
உதிக்க வைப்பவன் நீ
ஒருவனே!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 26, 2005)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts