தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
கடலில் எனது
படகை
மிதக்க விட்டு
துவக்க வேண்டும் எனது
பயணத்தை!
அந்தோ! இப்போது ஏன் எனக்கு
இந்த தயக்கம் ?
களைத்த எனது முதுமைக்
கால நேரங்கள்
கடந்து போகும் வீணாய்
கடற் கரையில்!
வசந்த காலமும்
பூத்துக் குவிக்கும் பணியை முடித்து
கடந்த கால மானது!
பயனற்றுப் போய்
இப்போது,
வாடி வதங்கிய பூக்களைச்
பாரமாய்ச் சுமந்து
பதுங்கி நிற்கிறேன்
ஒதுங்கிய வண்ணம்!
பேரி ரைச்சலை எழுப்பு கின்றன,
நீரலைகள்!
கடற்கரை மீது காய்ந்து
பழுத்துப் போன
மஞ்சள் நிற இலைகள் தள்ளாடி
விழுகின்றன,
நிழல் படிந்த சந்து பொந்தில்!
உற்று நோக்கி
வெற்று வானை நீ
வெறித்துப் பார்ப்ப தென்னே ?
அப்போது
வெகு தொலைவில்
அக்கரைக் கப்பால் வெளியாகி
காற்றிலே நீந்தி வரும்,
தாளமுள்ள
கானம் உனைத்
தழுவிச் செல்லும் போது,
மெய்சிலிர்த்து
மேனி உனக்குப்
புல்லரிக்க வில்லையா ?
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 5, 2005)]
- காதலுக்கு மூட்டுவலி
- கபடி கபடி
- அமிழ்து
- புகழ்
- 3 மதியழகன் சுப்பையா கவிதைகள்
- எனது எனச் சொல்லப்படுகின்ற….
- கீதாஞ்சலி (26) படகோட்டியின் தயக்கம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- உங்கள் மூதாதையர் யார் ?
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) நீர் ஊர்தி விருத்தி செய்தல் [Development of Watercrafts Part-2]
- வேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்
- பெரியபுராணம் – 43 திருக்குறிப்புத்தொண்டர் புராணத் தொடர்ச்சி
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2
- சூடான் – கற்பழிக்கும் கொள்கை
- இசட் பிளஸ்
- அம்மா
- ரோஜாப் பெண்
- குளங்கள்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-2)
- சிறைவாசம்
- திருவண்டம் – 3
- நாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.
- திராவிட ‘நிற ‘ அரசியல்.
- ஒரு கடிதம்