வ.ஐ.ச.ஜெயபாலன்
நீலவானம் கடலாய் உருகி
தழுவும்
தென்னங்
கரைகளிலே
பசிய
வயல்களின்
பின்னே
கோபுர
முலை
நிமிர்த்தும்
ஊர்களிலே
தொட்ட
ஒளியை
பூவாய்
தெறிக்கும்
கொட்டும்
அருவிக்
கரைகளிலே
மண்ணில்
விழுந்த
சுவர்க்கமாக
மூடும்
செழித்த
காட்டினிலே
பசை
நாக்கோடு
பசித்த
பல்லி
மனிதர்கள்
திரியும்
சுவர்
தோப்பான
நகர்களிலே
தேசத்
தீவின்
பரப்பெல்லாம்
வீடு
விட்டு
விடுதலையாகி
வீசும்
காற்றாய்
சுழன்றவன்
நான்.
எந்தாய்
மண்ணில்
அடங்க
மறுத்தும்
கொடுமைகள்
எதிர்த்தும்
கவிதைகள்
பாடித்
திரிந்தேனே.
திரும்பாதே
ஓடென்கிற
அகால
மரணமே
திரும்பி
வா
என்கிற
தாய்
மண்ணே
ஏன்
விதியின்
பந்தாய்
உதை
பட்டேன்
என் ஊர்,
உலகென்று
கிழிபட்டேன்.
‘உன்
தேசம்
துறந்து
அகதியாய்
சிதை ‘ என
உலகத்
தெருவெலாம்
கலைப்பவன்யார்.
ஓயா தோடி
வழி
நெடுக
இழைத்ததே
எனது
கவிமனசு
கொஞ்ச
நேரம்
எனைத்
தேற்ற
கோட்டு
யாழை
யார்
இசைப்பார்.
கபடி
கபடி
கபடி
கபடி
களம் என்
நாடு
நுழைகிறதும்
கொலைக்
கரங்களைத்
தப்பி
ஓடுறதும்
கபடி
கபடி
கபடி
கபடி
visjayapalan@yahoo.com
- காதலுக்கு மூட்டுவலி
- கபடி கபடி
- அமிழ்து
- புகழ்
- 3 மதியழகன் சுப்பையா கவிதைகள்
- எனது எனச் சொல்லப்படுகின்ற….
- கீதாஞ்சலி (26) படகோட்டியின் தயக்கம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- உங்கள் மூதாதையர் யார் ?
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) நீர் ஊர்தி விருத்தி செய்தல் [Development of Watercrafts Part-2]
- வேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்
- பெரியபுராணம் – 43 திருக்குறிப்புத்தொண்டர் புராணத் தொடர்ச்சி
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2
- சூடான் – கற்பழிக்கும் கொள்கை
- இசட் பிளஸ்
- அம்மா
- ரோஜாப் பெண்
- குளங்கள்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-2)
- சிறைவாசம்
- திருவண்டம் – 3
- நாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.
- திராவிட ‘நிற ‘ அரசியல்.
- ஒரு கடிதம்