ப்ரியன்
தப்பு தப்பாய் தமிழ்
வாசிக்க அறிவாய்!
தாறுமாறாய்
எழுதித்தந்தாலும்
தலைவன் எனக்காக
தரமானது என்பாய்!
கவிதை புத்தகங்கள்
காணோமென்று தேடினால்
தலையணை அடியிலிருந்து
எடுத்து நீட்டி இதனால்
என்மேல் உங்கள் கவனம்
குறைக்கின்றது என கோபித்துக்கொள்வாய்!
என்றுமில்லாமல்
இன்று புது வெட்கம்
காட்டி!
பூமியை புரட்டிப்போடும்
புன்னகை சிந்தி!
நாணி கோணி
சிரிப்பால் நனைந்து
எனையும் நனைத்து
தோள் சாய்ந்து
கையில் தந்தாய்;
படித்துவிட்டு
சொன்னேன் அருமையான
கவிதை படைத்தாய்!
சொல்லி முடிக்கும் கணம்
பொக்கைவாய் திறந்து
நம்மிருவர் முகம் நோக்கி
முதல் புன்னகை உதிர்த்தது
கையிலிருந்த கவிதை!
நம் குழந்தை!
– ப்ரியன்
- ஊரு வச்ச பேரு
- பெரியபுராணம் – 39 — 23. உருத்திர பசுபதி நாயனார் புராணம்
- பண்பு கெட்டுப் போர் புாிதல்..
- என் மழை தட்டுகையில்
- மரம்
- கீதாஞ்சலி (21) நிரந்தரமாய்க் கண்மூடும் நேரம்! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கார்டோசாட் -1 : தொலையுணர்வு செயற்கைக்கோள்
- கனடாவில் புதுப்பிக்கப்படும் பழைய கனநீர் அணுமின் நிலையங்கள்
- சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ பற்றி – படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல…
- கவிதையென்பது
- சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ – கதை பற்றிய என் எண்ணங்கள்
- குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998
- நண்பர் பரிமளத்திற்கு எனது பதில்
- கலர்ப் பாம்பு கரை ஒதுங்கி
- நிதர்சனம்
- அம்மம்மா
- தொடர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் (2)
- ஒரு மஞ்சள் மயக்கம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி பாகம்:3)
- கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 2
- சில ‘சொந்தக் குழந்தை ‘களின் பார்வையில் ‘தமிழர் தந்தையார் ‘
- ‘தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்! ‘ – ஈ.வே.ரா.வின் முழக்கம்
- புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 1
- இந்தியாவில்,மொழிகள்,அதிகாரம்,மற்றும் திராவிடத் தத்துவம்
- அயான் ஹிர்ஸி அலி – கருத்துகளுக்கு தரும் விலை
- குழந்தை
- கோடை
- புகாரியுடன் ஒரு சந்திப்பு