வலி

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

இளந்திரையன்


முக்காட்டின் சரிவுக்குள்
முகம் ஒழித்தபடி
நகர வேண்டும்
விரைவாய்

காற்றின் வாடையில்
கந்தகமும் தூசியும்
காதடைக்கும்
கதறலும் ஓசையும்

நீண்டு செல்லும்
இமைப் பொழுதுகள்

கற்குவியலுக்குள்
கை நீட்டி
உதடு விம்மும்
சிறுமியின்
குருதி முகம்
மகளின் நினைவாய்

நகர வேண்டும்
விரைவாய்
ஆனாலும்
நெஞ்சு வலிக்கிறது
மரணம்
எப்பொழுதும்
ஒன்றுதான்

-இளந்திரையன்
Singarrohan@aol.com

Series Navigation

author

இளந்திரையன்

இளந்திரையன்

Similar Posts