கவிதைகள்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

ஏக்நாத்


சாமிகள்
….

வாயைக்கட்டிய சாமிக்கு
மீண்டும் ஆங்காரம் வர
கும்பாபிே ?கம்
நடத்தணுமாம்.
தலைக்கட்டுக்கு
ஆயிரம் வரியென விதித்ததில்
வாயைக்கட்ட
ஆரம்பித்தேன் நான்.
….
எல்லா பெண்களுக்கும்
குங்குமம் வைக்க
சாமியாடிகளால்
மட்டுமே முடிகிறது.
….
வேட்டைக்குப்போன
மந்திரமூர்த்தியடித்து
செத்துப்போனாள்
சொல்லமாடனுக்கு ஆடும்
வயித்து பாப்பாவின்
மனைவி.
….
‘எனக்கு வல்லயம்
செஞ்சு போடுவியா ? ‘
‘திருநாத்துக் கொப்பறை
எடுத்து வைப்பியா ? ‘
பட்றையனை கும்பிடும்போதெல்லாம்
கேட்கிறார் Aாமிக் கொண்டாடி.
கோரிக்கை வைக்க போனவன்
கோரிக்கை எற்று திரும்புகிறேன்.
….
பூதத்தாருக்குச் சங்கிலி.
மந்திரமூர்த்திக்கு குத்தீட்டி.
பலவேசக்காரனுக்கு வீச்சருவா.
கருப்பசாமிக்கு கோங்கருவா
பட்றையனுக்கு வல்லயம்
ஆயுதங்கள் எல்லாம்
சாமிகள் கையில்
பலிகளை மட்டும்
மனிதர்களே பார்த்துக்கொள்கிறார்கள்.
….
அருள் வந்து
எல்லோருக்கும்
குறி சொல்லும் அம்மா
எனக்கோ அக்காவுக்கோ
சொன்னதேயில்லை.
….
பூடம் தெரியாமலேயே
சாமி ஆடினான்
புதிதாக அருள் வந்த
அரைக்கொடியான் மகன்.
….
ஒவ்வொரு கொடைக்கும்
ஆடுவதற்கு ஆளின்றி
அமைதியாகவே இருக்கிறார்
உள்ளிவிளை சாமி.
….
பிணமெரியாத சுடுக்காட்டுக்கு
வேட்டைக்குப் போகும்
பெரிய சாமி கொண்டுவரும்
எலும்புத்துண்டு யாருடையது ?
….
egnath_raj@sifycorp.com
egnath_raj@sify.com

Series Navigation

author

ஏக்நாத்

ஏக்நாத்

Similar Posts