கவிதை

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

வா.மணிகண்டன்


காற்று-
நெஞ்சுக்குழியின்
ஆழத்தில் பட்டுவிடாமல்
பேரிரைச்சலுடன்
வெளியேறிக்கொண்டிருக்கிறது.

வியர்வை
துளிகளாக
ஒட்ட ஆரம்பிக்கின்றன.

பெருவெளியில்
தனித்துவிடப்பட்ட
இலையென
அலையும்
கண்கள்.

இன்னும்
இரைச்சல்.

இன்னும்..
ன்னும்…
ம்..

ஒரு மிடறு
பால்
அல்லது
தண்ணீரில்
முடிந்துவிடக்கூடும்.

வா.மணிகண்டன்
—-
kvmanikandan1@yahoo.co.in

Series Navigation

author

வா.மணிகண்டன்

வா.மணிகண்டன்

Similar Posts