கவிதைகள்

0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

கவிநயா


பாறை

பாறை பேசாதிருக்கிறது…

கட்டிப் பிடித்துக் கொண்டாடும் போதும்
முத்த மிட்டுக் கூத்தாடும் போதும்
கோபம் கொண்டு குமுறும் போதும்
கண்ணீர் விட்டுக் கதறும் போதும்
போற்றிப் பாடித் துதிக்கும் போதும்
தூற்றித் தூக்கி எறியும் போதும்
முட்டி இரத்தம் கசியும் போதும்
வலியே வாழ்வாய் ஆகும் போதும்…

அசையாதிருக்கிறது, பாறை…


நிலவும், நானும்

உன்னைப் போல் எனக்கு
உலகெங்கும் ரசிகரில்லை
உன்னைப் போல் என்னை
புலவரெல்லாம் பாடவில்லை
உன்னைப் போல் நானோ
பார்புகழும் சாட்சியில்லை
உன்னைப் போல் அழகில்
முடிசூடா ராணியில்லை
ஆயினும்
உன்னைப் போல்தான் நானும்…
முடிவில்லா வெளியினில்
தனியளாய்…

–கவிநயா

meenavr@hotmail.com

Series Navigation

author

கவிநயா

கவிநயா

Similar Posts