புதியமாதவி
—-
நிழல்களின் ஊர்வலம்.
கைதட்டுகின்றன நிஜங்கள்
ஒலிபெருக்கிகளின் குரல்வலை நெறித்து
வாக்குறுதிகள் வலம் வருகின்றன.
ஆட்டுமந்தைகளை அடைத்துவைத்து
வெற்றி விழா நடத்துகிறது மக்களாட்சி.
கைதட்டலில் கூத்தாடுகிறது உங்கள் கொடிகள்.
உங்களுக்குத் தேவை எங்கள் நிஜங்கள் அல்ல.
எங்கள் நிழல்கள்.
உங்கள் காலடியில் எப்போதும் காத்திருக்கும் எங்கள் நிழல்கள்.
எங்கள் நிழல்களுக்கு மாலையிட்டு
எங்கள் நிஜங்களைர்த் தூக்கிலிடுகிறீர்கள்.
உதிர்ந்துவிழும் உங்கள் மாலைகளுக்காய்
உங்கள் மேடைகளின் பொன்னாடைகளுக்காய்
நிஜங்களின் இரத்தமேடையில்
நிழல்கள் நடனம்.
எரிமலையாய் வெடிக்கிறது
உங்கள் காலடியின் பூமி
திசைமாறிப் போகிறது நதியின் ஓட்டம்.
உங்கள் அணைகளை உடைத்து
எங்கள் வறண்ட மணலை ஈரப்படுத்துகிறது வெள்ளம்.
உங்கள் பூமிரேகையைக் கடந்து
பயணம் செய்கிறது ஜீவநதி.
உங்கள் காலடியில் கிடக்க மறுக்கின்றன
எங்கள் மலர்கள்.
கிளைகளை வெட்டிவிடலாம் என்று கனவு காணாதீர்கள்
எங்கள் வேர்கள் உங்கள் எல்லைகளைக் கடந்துவிட்டன.
இந்த நாட்களுக்காகத்தான் காத்திருந்தன எங்கள் இரவுகள்.
இனி..
வெளிச்சத்திற்கு வரும் எங்கள் நிழல்கள்.
எங்கள் நிஜங்களின் உருவத்துடன்-
எங்கள் நிஜங்களின் வாழ்க்கையுடன்-
எங்கள் நிஜங்களைப் பதிவுசெய்ய.
அப்போது எழுதுவோம்
நிழல்களின் விதிகளை
நிஜங்களின் அகராதியில்.
உங்கள் பொய்முகத்தின்
கண்ணாடிக்கண்களை
உங்கள் பொன்னாடைகளால் துடைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் விருதுகளைத் துறந்துவிட்டோம்
உங்கள் அரங்கின் கைதட்டல்களை மறந்துவிட்டோம்.
எங்கள் நிழல்களின் விடுதலை
உங்கள் காலடியில் கிடந்த எங்கள் நிழல்களின் விடுதலை
எங்கள் நிஜங்களின் பாதையுடன் பயணம்.
இது எங்களின் பயணம்.
எங்கள் நிழல்களுடன்
தொடரும்
எங்கள் நிஜங்களின் பயணம்.
—-
puthiyamaadhavi@hotmail.com
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-3
- ஒத்தை…
- அறிவியல் கதை – தக்காளித் தோட்டம் (மூலம் : சார்லஸ் டெக்ஸ்டர் வார்ட்)
- நீங்கள் தொலைவிலிருந்தபோதும் உங்கள் அருகிலிருக்கும் இணையப் புத்தகக் கடை
- கருமையம் அமைப்பின் நாடக விமர்சனக்கூட்டம்
- ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் பரிசு
- ‘சோ ‘ எனும் சந்தனம்
- மூன்றாவது மொழிப்போரும் கீறல் விழுந்த கிலுகிலுப்பைகளும்
- ‘பதிவுகள் ‘/ ‘தமிழர் மத்தியில் ‘ ஆதரவுச் சிறுகதைபோட்டி முடிவுகள் 2004!
- கல்லூரிக் காலம்!
- கவிமாலை (26/02/2005)
- நி ழ ல ற் ற வ னி ன் அ ல ற ல்
- யாழன் ஆதி கவிதைகள் – கண்ணீரும் தனிமையும்
- கதவு திறந்தது
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) – காட்சி நான்கு – அயோத்திய புரியில் ஆரம்பித்த அசுவமேத யாகம்
- பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை
- ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘
- கவிதை
- நாவில் கரைந்துகொண்டிருக்கும் கண்ணீர்
- மனிதச் சுனாமிகள்
- கவிதைகள்
- கவிதைகள்
- அவரால்…
- நிழல்களைத் தேடி….
- எனது முதலாவது வார்த்தை..
- அன்பின் வெகுமானமாக…
- எச்ச மிகுதிகள்
- கபீர் நெய்துகொண்டிருக்கிறார்…
- நிதி சால சுகமா ? மம்மத பந்தனயுத நர ஸ்துதி சுகமா ?
- நி ழ ல ற் ற வ னி ன் அ ல ற ல்
- வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும் – முன்னுரை
- சிந்திக்க ஒரு நொடி- அரசியலும் சராசரி மனிதனும்
- சீனா – துயிலெழுந்த டிராகன்
- தென்னகத்தில் இனக்கலப்பா ?
- திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள்
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! (தொடர்:3)
- மனக்கோலம்
- பிறந்தநாள் பரிசு
- தெப்பம் – நாடகம்
- மாங்கல்யச் ‘சரடு ‘கள்
- வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்
- இந்தியப் பெருங்கடல்
- பச்சைக்கொலை
- பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை
- பெரிய புராணம் – 33 – 19. அரிவாட்டாய நாயனார் புராணம்
- பாவம்
- ஒடுக்கப்பட்ட நுண்தரப்புகளிலிருந்து விடுதலை சாத்தியமா ?
- செல்வம் அருளானந்தம் எழுதிய எள்ளிருக்கும் இடமின்றி ஒரு கனதி வாய்ந்த கதை (திண்ணை, 2005-03-10)
- நூலறிமுகம்! – ‘மிஷியோ ஹகு ‘வின் ‘ஹைபர் ஸ்பேஸ் ‘!
- யுக யுகங்களாய்ப் பெயர்ந்த கண்டங்கள். மறைந்த விலங்கினங்கள். கண்டங்களை நகர்த்தும் அட்லாண்டிக் கடற்தட்டு. குறுகிச் சுருங்கும் பசிபி
- ராமானுஜனின் இன்னொரு கணக்கு புரிந்தது
- கவிதைகள்
- சுவாசத்தில் திணறும் காற்று
- மழை நனைகிறது….
- விரல்கள்
- கீதாஞ்சலி (16) – குழந்தைக்குப் போடும் கால்கட்டு! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கூ ற ா த து கூ ற ல் – கவிதைப் பம்பரம்
- அவரால்…
- து ை ண – 7 ( குறுநாவல்)