செல்வநாயகி
****
ஆரம்பித்துவிட்டன பூக்கள்
எப்போதும்போலவும்
இதற்கெனவே காத்திருந்தனவுமாக
எங்கிருந்தோவந்த காற்றுகிசைவுகொடுத்து
ஒரு சத்தமற்ற மோதலை
பேயாட்டத்தினின்றும்
விடுவித்துவிடும் கவனத்தில்
இடம்மாற்றி வைக்கப்பட்டும்
தப்புவதில்லை பூந்தோட்டம்
பெருங்காற்றின் கைகளில் இருந்து
இயலும்வரை போராடுகின்றன செடிகள்
எதிரெதிராக வளைந்தும்
மற்றொன்றின் நிமிர்தலில் குனிந்தும்
பூக்களின் சேதத்தை
தவிர்த்தலின் பொருட்டு
ஆனாலும்
மோதித் தொலைக்கின்றன பூக்கள்
செடிகள் தன்னிலைக்குத் திரும்புகையிலேனும்
சாதுக்களுக்குள்ளும் நுழைகிறது சிலசமயம்
உபயோகமற்று அழிந்தாலும்
மோதலை வெறுக்காத குரூரம்
உரமிட்டுவிட்டு நீர்பாய்ச்சும்போதும்
களையெடுத்தபின்பு ஓய்வெடுக்கும்போதும்
சிந்தித்தபடியே இருக்கிறான் தோட்டக்காரன்
பூக்கள் மோதமுடியாவண்ணம்
கட்டிவைக்க ஒரு கயிறோ
பூந்தோட்டம் கண்டவுடன்
வேகம் குறைத்துக்கொள்ளும் காற்றோ
வேண்டிப்பெறும் வழியை
அதுவரை தொடர்ந்துகொண்டுதானிருக்கும்
மோதலில் மடிந்துபோதல் பூக்களுக்கும்
சூடிக்கொள்ள நினைக்கும்நாளில்
பூக்கள் இல்லாதுபோதல்
தோட்டக்காரன் மனைவிக்கும்.
****
snayaki@yahoo.com
- அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)
- இறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்
- மூன்றாம் பக்கம் ( 3)
- நேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-1
- பாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் – இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும்
- ஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வாழ்வின் இசையை வடிக்கும் கலை
- ஹிப்பாங்… ஜிப்பாங்
- நேர்காணல் : வசந்த்
- ‘சே ‘
- உலகத்தின் மிக உயரமான டென்னிஸ் கோர்ட்
- உலகத்தில் பார்க்கவேண்டிய இடங்கள்
- ‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்
- அருண் வைத்தியநாதனின் குறும்படம் திரையிடல்
- வெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்
- ஸ்த்ரீ கானம்
- பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும்!கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும்!(Ice Age, Sea-Floor Rise & Fall) [3]
- பெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்
- வன்முறை
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்
- ஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே
- கண்ணாடிக் கண்கள்
- சிறகுகள் முளைத்து..
- து ணை – குறுநாவல் -பகுதி 5
- விலங்கு நடத்தைகள்..
- சிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]
- சிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…
- தமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் – சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன்
- ஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்
- கடலை வசக்குதல்
- சிலுவையில் மலருமா ரோஜா ? மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்
- பருந்துகள்
- வாய்திறந்தான்
- ஒரு மரத்தின் இறப்பு!
- குமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன ?