இளைய அப்துல்லாஹ்
ஆத்மார்த்தம்
—-
அவன் தர முடியாத எல்லாவற்றையும்
நீ தருகின்றாய் உள்உரமாக உன்னிலும் மேலானதை
என் மீதான அக்கறை பற்றிய நெடும் நினைவுகளில்
நான் திளைக்கும்படிஸ
என் எல்லா உணர்வுகளின்
நேரங்கள் பவித்திரமானவை
அவை அவனுக்கானவை ஆனால்
உன்னிடம் தான் இருக்கின்றன.
என் ஆகர்ஷிப்பை நீ சுவாசமாக்கியதனால்
என்னுள் நீ பஸ்ப்பமானாய்
உன்னை என்னுள் புகுத்தி
அல்லது பத்திரப்படுத்தி
எனக்குள்ளாகவே இருத்திக்கொள்வேன்.
எக்காலத்திலும்
அவன் உன்னாக ஆக முடியாது
நெடுங்காலமான சிறுமைகளை விட
உன் நொடிப்பொழுதும் திருப்தியும்
என்னோடு ஸ்பரிசிக்கும்.
எனது சுய சிந்தனையின் தெளிவிலும்
விகர்ஷிப்பிலும் உன்னுள் என்னை
செலுத்துவதை விரும்புகிறேன்.
அது உயிரில் உயிர் மீதான
ஒருவகை கேளிக்கை.
நான் எப்பொழுதும் நானாக
இருந்தபடிக்கு உன் நேசங்களை
எல்லாப்பொழுதிலும் சுதந்திரமாக உணர்வேன்.
ஏனெனில் நான் சுதந்திரமானவள்.
அது
—-
அந்த உற்பவிப்பு எல்லோருக்கும்
வாய்க்காதது.
ஒரு முகிழ்த்தல் போலத்தான்.
முகிழ்த்தல் என்பது எவ்வளவு அற்புதம.;
பூக்கள்,விதைகள்,குழந்தை,மனம்,என்றபடிக்கு
முகிழ்த்தல் அகலும்.
ஒரு மெனளத்துள்; ஆழ்வதும்
அதனை ஸ்பரிஸிப்பதும் ஒரு முகிழ்த்தல்தான்
ஒரு சூழலுக்கு இயைவதும்
சூழல் எமக்குள் புகுவதும் இன்பம்
மென்புல் வெளியில் மெதுவாய் இறகசைத்து
சிறு குருவி நுழைவதும் மென்மை
மனத்திடை சில நேரம் உதிர்த்தும்
மென் இழைகள்,நெகிழ்வுகள்,மெல்லியகாதல்,
ஒரு பச்சாதாபம் எல்லாமே
அற்புதம் நிகழ்த்தும் முகிழ்த்தல்கள்.
எரியும் தீயிடை ஊன் உருகுவதுமாகி
எந்த ஒப்பனையுமற்றதும்
எதிர்கால அச்சமின்மை பற்றிய உறுதியும்
உள் மனதில் அது பற்றிய ரீங்காரமும்
எப்பொழுதும் ஒரு வகை உச்சாய்ப்பில் கிளர்வதும்
வெண்பனியிடை மெல்லிதழ் தொடுவதாய்
உணர்வதும் எல்லாக்காலங்களும்
எல்லாப்பாதைகளும்
நந்தவனத்தை நோக்கியதாய்
அமைவது போலவும்
இருப்பது ஒன்றெனில்
அது காதல் தானே.
இளைய அப்துல்லாஹ்
இலங்கை
- ராம்தாஸ் – சேது – திருமாவளவன் சூளுரை
- கழுதையின் காம்போதி !
- கடிதம் ஜனவரி 27,2005 – பசுமை தாயகம் வேண்டுகோள்
- கடிதம் ஜனவரி 27,2005
- ஒரு மனுதர்மவாதியும், ஒரே பொய்யின் ஆயிரம் வடிவங்களும்
- கடிதத்தின் பொருள்: நாகூர் ரூமியின் கவிதை
- விடைபெறுகிறேன்
- கடிதம் ஜனவரி 27,2005
- கடிதம் ஜனவரி 27 ,2005 – ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்!
- கடிதம் ஜனவரி 27,2005
- கடிதம் 27, ஜனவரி 05 – ஜெயமோகனின் அறிவியல் புனைகதை 9
- தமிழ்
- இயற்கையே என் ஆசான்
- நபிகள் நாயகம் – ஜைனப் மணம் : சலாஹுதீனுக்குச் சில விளக்கங்கள்
- கடிதம் ஜனவரி 27,2005 – பெரியார் மதம்
- ஓவியக் கண்காட்சி
- கடிதம் ஜனவரி 27,2005 – ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்!
- ஓரு உரைநடைச் சித்திரம்.
- கவிக்கட்டு —- 46
- கீதாஞ்சலி (12) – விழித்தெழுக என் தேசம்!(மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- இணக்கு
- கவிதைகள்
- மீட்டெடுக்கச் சொல்கிறேன்
- நேர்முகமும் எதிர்முகமும்
- கோவா – கூடியாட்டம் – குட்டிச் சாத்தான்(மஞ்சரி ஃபிப்ரவரி 1955 – பகுதி 2)
- ஒப்பிலான்
- சுனாமியும்,நிதியுதவியும் உலக நாடுகள் கூறும் மனிதாயமும்- மக்களாண்மை நோக்கிய தேடலும்
- வீங்கலை விபரீதங்கள்…. என் அனுபவம் – 2
- வரலாறும் மார்க்சியமும்
- குறுநாவல் – து ை ண – 2
- காரின் மனக்கதவுகள்
- அறிவியல் புனைகதை – ஜீன் திருடனின் விநோத வழக்கு (மூலம் நான்ஸி க்ரெஸ்)
- கதறீனா
- ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி…
- பூ ை ன சொன்ன க ை த
- முழுமை
- புத்தர் இயல்பு (மூலம் ZEN)
- மண்ட்டோ படைப்புகள் விமர்சனக்கூட்டம்
- நிஸ்சிம் எஸக்கியல் : பெயர்தலும் அலைதலும்
- பெண்ணியம் தொடர்பான வெளியீடுகளின் பின்னணியில் பெண்கள் சந்திப்பு மலர் 2004
- இந்தோனேசியா தீவுகளில் உண்டாகும் பூகம்பம் இந்து மாக்கடல் அரங்கில் சுனாமியைத் தூண்ட வல்லது (3)
- இளமையும் ஞானமும் (மூலம் – Michaelangelo)
- ஆதங்கம்
- சோதி
- பெரியபுராணம் – 28 – ( கண்ணப்பநாயனார் புராணம் தொடர்ச்சி )
- வானம் வசப்படும் (மூலம் – Michaelangelo)
- பலி (மூலம்- MARCOSAN)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் -56 (முடிவு)