புகாரி
(இந்தக் கவிதைக்கு ஒரு தனி நடைச்சிறப்பு இருக்கிறது. முதல் இரு அடிகளையும்
கவனியுங்கள். ‘இதயம் ‘ என்று துவங்கி ‘மொழி ‘ என்று முடிகிறது. பின் ‘தமிழ் ‘ என்ற
உயிர்ச் சொல்லைத் தனிச் சொல்லாக நிறுத்திவிட்டு, பின் ‘மொழி ‘ என்னும்
சொல்லிலேயே துவங்கி ‘இதயம் ‘ என்ற சொல்லுக்கு வந்து ஒரு முழு சுற்றினையும்
ஆனந்தமாய் நிறைவு செய்கிறது. இதே போலவே இக்கவிதை முழுவதும் தமிழைப்
போற்றிப் பாடும் இக்கவிதையைத் தமிழ்த்தாய் புன்னகையோடு தன் கூந்தலில்
சூடிக்கொள்வாள் என்று நம்புகின்றேன்.)
இதயத்தில் இனிக்கின்ற மொழி – தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற இதயம்
கவிதைக்குள் விளைகின்ற வைரம் – தமிழ்
வைரத்துள் ஒளிர்கின்ற கவிதை
விரலுக்குள் ஊறிவரும் எழுத்து – தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற விரல்
ஓசைக்குள் கூடுகட்டும் சுகம் – தமிழ்
சுகங்களில் வெடிக்கின்ற ஓசை
காற்றுக்குள் சிறகோட்டும் வாசம் – தமிழ்
வாசத்தால் எழுந்தாடும் காற்று
பார்வைக்குள் விரிகின்ற வானம் – தமிழ்
வானத்துள் மிளிர்கின்ற பார்வை
மண்ணுக்குள் கருவான வளம் – தமிழ்
வளத்தினில் கொழிக்கின்ற மண்
இயற்கைக்குள் முத்தாடும் மழை – தமிழ்
மழையினில் தழைக்கின்ற இயற்கை
மனசுக்குள் எழுகின்ற உணர்வு – தமிழ்
உணர்வினுள் கசிகின்ற மனசு
மூச்சுக்குள் உள்ளாடும் தாகம் – தமிழ்
தாகத்தில் தீயாகும் மூச்சு
மோகத்துள் கமழ்கின்ற இளமை – தமிழ்
இளமையில் திரள்கின்ற மோகம்
முயற்சிக்குள் முளைவிடும் சிறகு – தமிழ்
சிறகினில் தெறிக்கின்ற முயற்சி
மனிதத்துள் செழித்தோங்கும் கருணை – தமிழ்
கருணையால் வேர்பாயும் மனிதம்
உயிருக்குள் குடிகொண்ட மானம் – தமிழ்
மானத்தில் துடிக்கின்ற உயிர்
தீபத்துள் வாழ்கின்ற புனிதம் – தமிழ்
புனிதத்தில் நிமிர்கின்ற தீபம்
*
அன்புடன் புகாரி
buhari@gmail.com
- ராம்தாஸ் – சேது – திருமாவளவன் சூளுரை
- கழுதையின் காம்போதி !
- கடிதம் ஜனவரி 27,2005 – பசுமை தாயகம் வேண்டுகோள்
- கடிதம் ஜனவரி 27,2005
- ஒரு மனுதர்மவாதியும், ஒரே பொய்யின் ஆயிரம் வடிவங்களும்
- கடிதத்தின் பொருள்: நாகூர் ரூமியின் கவிதை
- விடைபெறுகிறேன்
- கடிதம் ஜனவரி 27,2005
- கடிதம் ஜனவரி 27 ,2005 – ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்!
- கடிதம் ஜனவரி 27,2005
- கடிதம் 27, ஜனவரி 05 – ஜெயமோகனின் அறிவியல் புனைகதை 9
- தமிழ்
- இயற்கையே என் ஆசான்
- நபிகள் நாயகம் – ஜைனப் மணம் : சலாஹுதீனுக்குச் சில விளக்கங்கள்
- கடிதம் ஜனவரி 27,2005 – பெரியார் மதம்
- ஓவியக் கண்காட்சி
- கடிதம் ஜனவரி 27,2005 – ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்!
- ஓரு உரைநடைச் சித்திரம்.
- கவிக்கட்டு —- 46
- கீதாஞ்சலி (12) – விழித்தெழுக என் தேசம்!(மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- இணக்கு
- கவிதைகள்
- மீட்டெடுக்கச் சொல்கிறேன்
- நேர்முகமும் எதிர்முகமும்
- கோவா – கூடியாட்டம் – குட்டிச் சாத்தான்(மஞ்சரி ஃபிப்ரவரி 1955 – பகுதி 2)
- ஒப்பிலான்
- சுனாமியும்,நிதியுதவியும் உலக நாடுகள் கூறும் மனிதாயமும்- மக்களாண்மை நோக்கிய தேடலும்
- வீங்கலை விபரீதங்கள்…. என் அனுபவம் – 2
- வரலாறும் மார்க்சியமும்
- குறுநாவல் – து ை ண – 2
- காரின் மனக்கதவுகள்
- அறிவியல் புனைகதை – ஜீன் திருடனின் விநோத வழக்கு (மூலம் நான்ஸி க்ரெஸ்)
- கதறீனா
- ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி…
- பூ ை ன சொன்ன க ை த
- முழுமை
- புத்தர் இயல்பு (மூலம் ZEN)
- மண்ட்டோ படைப்புகள் விமர்சனக்கூட்டம்
- நிஸ்சிம் எஸக்கியல் : பெயர்தலும் அலைதலும்
- பெண்ணியம் தொடர்பான வெளியீடுகளின் பின்னணியில் பெண்கள் சந்திப்பு மலர் 2004
- இந்தோனேசியா தீவுகளில் உண்டாகும் பூகம்பம் இந்து மாக்கடல் அரங்கில் சுனாமியைத் தூண்ட வல்லது (3)
- இளமையும் ஞானமும் (மூலம் – Michaelangelo)
- ஆதங்கம்
- சோதி
- பெரியபுராணம் – 28 – ( கண்ணப்பநாயனார் புராணம் தொடர்ச்சி )
- வானம் வசப்படும் (மூலம் – Michaelangelo)
- பலி (மூலம்- MARCOSAN)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் -56 (முடிவு)