காதல்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

சித்தாந்தன்


அன்பாக உன் தோளில் சாய்கிறேன் என்று நினைத்தாயா… ?
இந்த சந்தேகப் பிராணியை உனக்குத் தெரியாதா… ?
என் சந்தேகம் தீர்ந்தது… ஆம்…
உன் இதயம் என் பெயரைத் தான் சொல்கிறது…
என்னவளே… நீ என் மூளையைத் தொட்டுப் பார்க்கிறாய்…
இவன் நம்மைப் பற்றி என்ன யோசிக்கிறான் என்று…
நானோ என்னை உன் ‘நினைவில் ‘ தேடுகின்றேன்…
நீயோ உன்னை என் ‘சிந்தனையில் ‘ தேடுகின்றாய்…
ஆம்…
ஆண்மையும் பெண்மையும் மிகவும் வேறு பட்டவை…
அதனால் தான் ஆண்டவன் காதல் என்ற ஒன்றைச் செய்து
வேறுபட்ட இவ்விரு ‘மை ‘ களையும் ஒருமைப் படுத்தி
என் வாழ்வை அருமை செய்தான்…
உலகினிலே பெருமை வெய்தான்…!

sivaramakrishnan_s@yahoo.com

Series Navigation

author

சித்தாந்தன்

சித்தாந்தன்

Similar Posts