கவிதை

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

விஜய மோகனச்செல்வி செல்வரத்தினம்


‘தனிமையின் வெறுமைகளில்
ஒவ்வொன்றாய் நினைவு வரும்
செய்த பாவங்களும் செய்ய
தவறிய உதவிகளும்!..அன்று
உள்ளுணர்ந்து மனம் கேட்கும்
இது வாழ்வின் விளிம்பா!
சாவின் நிழலா ?
எப்போது சாவு வரும் ? பதில்
தெரியாத காரணத்தால்
வாழ்வை தொலைக்கின்றோம்
இப்போது வரும் எனில்
அந்தக்கணம் தொட்டு
வாழ துடிக்கின்றோம்!..!….
மனிதா!..தொலைக்கும் வரை
எதுவுமே தெரிவதில்லை….
ஒவ்வொரு மரணத்திலும்
சுடலை ஞானம் பிறக்கும்!..
என்ன வாழ்க்கை இது!..
ஓ!..இதுவா வாழ்க்கை என்ற
பல கேள்விகள் மனதை
துளைக்கும்!
மனக்கண் அன்று திறக்கும்..
அதன் பின்!..பழைய குருடி ‘
கதைதான்..!.
—-
vijiselvaratnam@yahoo.ca

Series Navigation

author

விஜயமோகனச்செல்வி செல்வரத்தினம்

விஜயமோகனச்செல்வி செல்வரத்தினம்

Similar Posts