ஒரு கவிதை

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

றஞ்சினி


யாரும் நினைத்திரா ராட்சத அலைகளால் இழந்து

நிற்கிறோம் எம் அன்பு உறவுகளை

குழந்தைகள் பெண்கள் முதியோர் ஆண்களென

பல்லாயிரக் கணக்கில் .

இந்து சமுத்திர திவுகளெங்கும்

மனித இறப்பின் அவலம் தொடர்கிறது

ஆபிரிக்காவையும் விட்டுவிடவில்லை

இது என்ன கொடுமை

இலங்கை இந்திய கரைகள் தோறும்

மிருகங்கள் போல மனித உடல்கள்

அநாதைகளாக பல்லாயிரக் கணக்கில்,

அள்ளி அடுத்து புதைக்கும் நிலமை

பார்த்து நிக்க இதயம் வலித்து கண்கள் நிறைகிறது

போரினால் இழந்தோம் பல்லாயிரக் கணக்கில்

அதையும் தாண்டி இயற்க்கையிடம் சிக்கி இறந்த உறவுகள் .

யாரை நோவது யாரிடம் உரைப்பது

இயற்க்கையே உனக்கு ஏன் இந்த சீற்றம்

மனிதர்கள் உன்னை அழிப்பதனாலா

மனிதர்கள் உன்னை வதைப்பதனாலா

உன்னை பரிசித்து வல்லரசுகள்

தம்மை பலம் செய்வதனாலா

ஏழை மக்களின் உயிரை ஏன் பதிலாக கொண்டாய்

இயற்கையை அன்னையின் சீற்றக்கணக்கில்

இன்னும் எத்தனை அழிவுகள் உழதோ

இனியாவது உன்னை

உனது சீற்றத்தை மனிதர்கள் புரிந்திடுவார்களா
—-

shanranjini@yahoo.com

Ranjini Frankfurt

Series Navigation

author

றஞ்சினி

றஞ்சினி

Similar Posts