புலம்பல்

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

புகாரி


தானே
தனக்காக இசைக்கும்
கண்ணீர்த் தாலாட்டு

செத்த மனத்தை
மடியில் கிடத்திக்கொண்டு
மிச்ச மனம்
உதட்டு வாத்தியத்தில்
உயிரைப் பிழிந்து வைக்கும்
ஒப்பாரி

ஆயினும்கூட
புலம்பல் ஓர்
புண்ணிய நதிதான்

அதில் நீராடும்போது
பரிதவித்துப் படபடக்கும்
உயிர்ச் சருகையும்
தீண்ட வழியற்று
கரைகளில்தான்
காத்துக்கிடக்கிறது
மரணத் தீப்பந்தம்

*

அன்புடன் புகாரி
buhari@gmail.com

Series Navigation

author

புகாரி

புகாரி

Similar Posts