உன்னால் நான்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

சிக்கந்தர் பாஷா


உன்னோடு உலகத்தில் வாழ்வதால்
உன் சக மனிதனாகிறேன்
உள்ளத்தில் உன்னை இருத்தி
உன் கோவிலாகிறேன்
மண்மேல் உன் தடம்தேடி
உன்னை தொடர்ந்தவனாகிறேன்
மாலையில் உன் பாடல்கேட்டு
உன் இரசிகனாகிறேன்
கோபத்தில் நீ கொதிக்க
சாந்தமாகிறேன்
கொஞ்சும்போது நானுன்
குழந்தையாகிறேன்
அக்கரையாய் நீ பேச
அடிமையாகிறேன்
அடைக்கலம் தேடி நானுன்
அகதியாகிறேன்
நெஞ்சத்தால் நானுன்
உணர்வாகிறேன்
உன் நினைவுகளால்மட்டுமே
நான் கவியாகிறேன்!

sikkandar.basha@wipro.com

Series Navigation

author

சிக்கந்தர் பாஷா

சிக்கந்தர் பாஷா

Similar Posts