புகாரி
பிள்ளைப் பிராயத்தில்
சிவந்த அல்லிக் குளத்துமேட்டில்
அரைக்கால் சட்டையில்
அரையணா இடைவெளியில்
அனாயாசமாய் நின்றுகொண்டே
சிறுநீர் வார்த்தபோது
நான் உணரவில்லை
பறக்கத் துடிதுடிக்கும்
குயிலிறகுக் கூட்டங்களாய்
கருத்தடர்ந்த அழகு மீசை
மேலுதட்டு மொட்டை மாடியில்
குப்பென்று வளர்ந்து நின்று
கம்பீரம் காட்டியபோது
நான் உணரவில்லை
மேற்குமலைத் தொடர்களாய்ச்
செழித்துத் திரண்ட தோள்கள்
வான் நிமிர்த்தி வாட்ட சாட்டமாய்
யானை நடை பயிலவைத்தபோது
நான் உணரவில்லை
அந்திவெயில் குடையின்கீழ்
குறுகுறுவென்ற கிளிக் கண்கள்
பலநூறு… கூட்டமாகக்
கொத்திக்கொத்தித் தேன்தின்று
குறும்பாகப் பார்த்தபோது
நான் உணரவில்லை
முட்டவந்த முரட்டுக் காளை
எட்டியோட முட்டி விரட்டி
நெஞ்சு வேர்க்க நின்றபோது
நான் உணரவில்லை
கல்யாண ஊர்வலத்தில்
மணமகன் கோலத்தில்
ஊரறிந்த நாயகனாய்
பேரின்பக் கண்கொதிக்க
ஊர் உலா வந்தபோது
நான் உணரவில்லை
.
நான் கருவான முதல் இரவு
என் முதலிரவில்லையாம்
பனிக்குடப் பிசுபிசுப்போடு
எட்டி இந்த உலகு பார்த்து
நானழுத முதல் இரவு
என் முதலிரவில்லையாம்
சட்டப்படி பெண்ணொருத்தியை
பட்டு மெத்தையில்
தொட்டுப்பார்க்கும் இரவுதான்
எனக்கு முதலிரவாம்
அடடா…
பாலுறவில் உள்ளதோ
நம் பண்பாடு ?
அந்தச் சமுதாயப்
பண்பாட்டு இரவிலும்கூட
நான் உணரவில்லை
.
பின்
எப்போதுதான் உணர்ந்தேன்
நானென் ஆண்மையை ?
.
என்னுயிர் தொட்டுத்
தன்னுயிர் கலந்து
புத்துயிரென்னும்
கருவோடு மிளிர்ந்தாள்
பெண்மை என்னும்
கர்வத்தோடு எழுந்தாள்
என் தாகத்திற்குத்
தாகத்தாலேயே
தண்ணீர் தந்த தேவமல்லி
என் மோகத்திற்கு
மோகத்தாலேயே
தீர்வு தந்த பவளமுல்லை
அப்போதுதான்
ஆம்… ஆம்…
அப்போதுதான் நான்
சத்தியமாய் உணர்ந்தேன்
என் ஆண்மையை
.
பெண்மையை உணர்த்துவது
ஆண்மையுமல்ல
ஆண்மையை உணர்த்துவது
பெண்மையுமல்ல
இயற்கையின் துணையோடு
இருவரும் சேர்த்துச் சமைக்கும்
உயிர்க்கரு என்ற
உன்னதக் கூட்டு முயற்சியே
.
இதில்
ஆண்மையும் ஆனந்திக்கும்
பெண்மையும் பூரிக்கும்
ஆண்மை பெண்மை
இரண்டும் ஒன்றாய்க் கலந்த
அழியா இயற்கையும்
பூத்துக் குலுங்கும்!
*
அன்புடன் புகாரி
buhari@gmail.com
- விமல் குழந்தைவேலின் வெள்ளாவி நாவல் நூல் வெளியீடும் விமர்சனக்கூட்டமும்
- ஜோதிர்லதா கிரிஜாவின் எழுச்சி!
- சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பாக
- கடிதம் – சுந்தர ராமசாமியின் அறிக்கை பற்றி
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவரங்கம்
- கடிதம் நவம்பர் 25,2004 – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் பதிப்பாசிரியர் பத்ரி சேஷாத்ரிக்கு
- அபத்தங்களும், மழுப்பல்களும்! (சூரியாவின் பார்வைக்கு)
- கடிதம் நவம்பர் 25,2004 : இஸ்லாமிய சகோதரர்களுக்கு, நேர்மையின் பாலபாடம் குறித்து,அன்புடன் ஒரு காஃபீர்
- கடிதம் நவம்பர் 25,2004 – பரிணாம கோட்பாடு: புதிய தகவல்கள்!
- Trouble with Islam புத்தகத்தின் அரபி மொழிப் பதிப்பு – இடதுசாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்
- 2006 நவம்பர் 22 ராம்தாஸைப் பாராட்டிய ரஜனி
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை
- தைரியலட்சுமியின் பக்தர் – ஃபோட்டோ செய்தி – ஒரு விளக்கம்
- அறிவு
- லீனா மணிமேகலையின் நான்கு ஆவணப்படங்களும் கலந்துரையாடலும்
- கடிதம் நவம்பர் 25,2004 – சங்கரமடத்தை பிடித்தாட்டும் ர(ா)கு காலம்
- கடிதம் நவம்பர் 25,2004
- ஆகாயப்பறவை.
- தீண்டத் தகாதவர்கள் யாருமற்ற உலகம்
- பழைய சைக்கிள் டயர்
- சொல்லத்தான் நினைகின்றேன்
- ஆண்மையை எப்போது
- SMS கவிதைகள்
- குழந்தையிடம் ஒரு வேண்டுகோள்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் ?
- தமிழ் அளவைகள் -2
- மெய்மையின் மயக்கம்-27
- தமிழ் அளவைகள் – 1
- வாரபலன் நவம்பர் 25, 2004(ஜெயேந்திரர் சோதனை, சர்தார்ஜி சாதனை, குஞ்ஞாலிக்குட்டி வேதனை, திருமேனி ரோதனை)
- தமிழின் மறுமலர்ச்சி – 7
- பாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி!
- மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்
- தமிழ் அரசியல்
- திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005
- அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47
- பர்ஸாத்
- இது என்னுடைய வெள்ளிக்கிழமை
- நீ வருவாயென..
- வையாபுரிப்பிள்ளை குறித்து
- நன்றி நவில ஓர் நாள்.
- கவனிக்கவும்!
- மின்சாரத்திற்கு மாற்று வழியிருக்கு; மாட்டுவண்டி தேவையில்லை!
- பெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )
- கீதாஞ்சலி (5) இசைப் பாடகன்
- அன்பு நண்பா !
- இலையுதிர்காலம்….
- நரகல் வாக்கு
- இந்த ஆண்டின் நாயகன்
- சொட்டாங்கல்
- சிதிலம்
- அலமாரி
- தொலைந்து போன காட்சிகள்