வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் ?

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

வெண்ணிலாப்ரியன்.


ஒரு குடைக்குக் கீழே
நடந்து கொண்டே இருந்தோம்
ஒரு பக்கம் மழை
மறு பக்கம் வியர்வை!

அருகருகே அமர்ந்திருந்தோம்
உன் முன்னே நான்
என் பின்னே நீ!

ஒன்றாக ரசித்து சிரித்தோம்
நீ சிரித்தது எனக்காக
நான் சிரித்தது உனக்காக!

கண்களால் கலவி கொண்டோம்
மேல் இமை நானாக
கீழ் இமை நீயாக!

கவிதையாய் ஒரு கதை படித்தோம்
விழுந்த புண் எனக்கு
விழுப்புண் உனக்கு!

மீண்டும் மீண்டும் தொடர்கிறோம்
காற்புள்ளி நானாக
முற்றுப்புள்ளி நீயாக.!

உண்மையாய் உண்மையைச் சொல்வோம்…
நான் யாரென்று எனக்கும்
நீ யாரென்று உனக்கும்.

வெண்ணிலாப்ரியன்.
yemkaykumar@yahoo.com

web: http://yemkaykumar.blogspot.com

Series Navigation

author

வெண்ணிலாப்ரியன்.

வெண்ணிலாப்ரியன்.

Similar Posts