வெண்ணிலாப்ரியன்.
சித்திரை பத்து
பெளர்ணமி ராவுல
மொத்தச்சனமும்
குமிஞ்சி கெடக்கும்
மந்தமாச் சிரிக்கும்
அய்யனார் வாசல்லெ.
‘என்னப்பா இது ‘ன்னு
எதுக்கெடுத்தாலும்
சந்தேகம் கேக்கும்
அஞ்சாப்பூ காயத்ரிப்புள்ளக்கி
அணில் முட்டை காட்ட
கம்மாக்கரக்கி கூட்டிப்போயி
கன்னத்துல
முத்தங் கேப்பேன்
அணில் முட்டைக்கி அட்வான்ஸா!
ஆடிக்கொடையின்
அஞ்சாம் நாள் கருக்கலில்
பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில்
பூசாரி மக பொன்னாத்தா
மஞ்சத்தண்ணி சிதறியடிக்க
‘தொம்மு தொம் ‘முன்னு
‘எல்லாம் ‘ ஆட சாமியாடுவா
கன்னத்துல போடத்தான்
கையெடுத்து
இடுப்பைப் பிடிப்பேன்
மானசீகமா.
நாலு பக்கமும் வாயப்பொளந்து
வம்பு பேசும் தகரச்செட்டு
கட்டம் போட்ட வேட்டித்துணிய
கம்புல கட்டி
காட்டுவான் படம்
ஆளான காயத்ரிப்புள்ள
அழகான குஞ்சம் வெச்சி
மெரள மெரள
தாவணியில் வருவா
கண்ணு ரெண்டும் படத்தப் பாக்க
கட்ட வெரல்
தொடையைச் சொரண்டும்
பாம்பு பாம்புன்னு
பதறி எழுந்தவ
எல்லாஞ் சரியாக
என்னப் பாத்து
குஞ்சத்தை நிமித்தி
கோபத்தைக் காட்டுவா.
ஊரடங்கிப்போன
ஒரு பேய் புழங்கும் சாமத்துல
ஒத்த வீட்டு நாயி கத்தும்
ஒவ்வொன்னையும் நெனச்சி நெனச்சி
பூனைப்பாதம் பொத்தி வெச்சி
முள்ளுவேலி தாண்டிக்குதிச்சி
முத்தங் குடுத்துட்டு வருவேன்
எல்லை காக்கும்
வீரன் மனைவிக்கு
இலவசமா.
சேரிச்சிம்ரன் செவத்தப்பொண்ணு
மூணு மாசம் முழுகாம
ஊருவெச்ச பஞ்சாயத்தில்
நா ஒருத்தன் தான்னு
அவ கையக்காட்ட
ஏழெட்டுப்பேர்க்கு
பழக்கம் அவள்ன்னு
நெஞ்சறிஞ்சு
சொன்னேன் சாட்சி
ஏஞ்செவத்தப்பொண்ணே சிம்ரனு
செஞ்சதெல்லாம் தப்பு
மன்னிச்சுக்கோ மகராசின்னு
இருட்டுக்கோழி சாட்சி வெச்சி
ஊர்ப்பயணம் பொயிட்டு
ஒண்டியா வரும்போது
சுடுகாட்டுல நின்னு சொல்வேன்
செவத்தப்பொண்ணு செத்தவாரம்.
சிரிக்கும்
என் பேய் மனசு.
எல்லாந் தெரிஞ்ச
நெறஞ்ச நெலவு
எடுத்துச்சொல்லும்
கணக்கு வெச்சி
தொடை பாத்து கிளர்ச்சியடையும்
அனிச்சையான
ஆண் குறியாட்டம்
எச்சில் விட்டு போன மச்சான்
மிச்சம் மீதிய மோந்து பாக்க
எந்திரிப்பான் நெஞ்சு தூக்கி
கவட்டுக்கம்புல இறுக்கி அழுத்தி
எலந்தக் கம்பால இழுத்து அடிப்பான்
இது எதுவுந்தெரியாத வெட்டியான்
எல்லாத்துக்கும் பரிசா.
வெண்ணிலாப்ரியன்.
yemkaykumar@yahoo.com
- ஞானப் பெண்ணே
- கடிதம் நவம்பர் 18,2004
- அவளோட ராவுகள் -3
- ஆசாரகீனனின் ஏக்கம் தீர்ந்ததென்றால்
- ஃபோட்டோ செய்தி: தைரியலஷ்மியின் பக்தர் நேரியல் கட்டி…. கைகட்டி பணிவாக…
- பார்த்திபனின் அமெரிக்கத் தமிழர் பற்றிய பேச்சு
- மக்கள் தெய்வங்களின் கதை – 10
- ஓவியப் பக்கம் ஏழு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல்
- தமிழின் மறுமலர்ச்சி – 6
- வையாபுரிப் பிள்ளை – செய்ய வேண்டியவை
- தமிழர்களின் அணு அறிவு
- கடிதம் நவம்பர் 18,2004
- ஒடுக்குமுறைக்கு எதிரான அரங்கு – நவம்பர் 21, 2004
- கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 1. இறுதி நபி
- கவிக்கட்டு 35 – வசந்தகாலங்கள்
- தீ தந்த மனசு
- கவிதைகள்
- நகரில் தொலைந்த நட்சத்திரங்கள்
- பெண்சிசுக்கொலைகளும் பிரிட்டிஷ் அரசாங்கமும்
- பயங்கரவாதமும், பலதார மணமும்
- ஜெயேந்திரர் கைது பற்றி அறிக்கை
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்
- கடிதம் நவம்பர் 18,2004 – இயக்குனர் வான் கோவின் குறும்படம்
- கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா
- காணாமல் போன கடிதங்கள்
- மெய்மையின் மயக்கம்-26
- பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (9)
- ஜெயேந்திரர் கைது – ஜெயலலிதா அரசின் தொடரும் அராஜகம்
- இளித்ததாம் பித்தளை! – துக்ளக் இதழில் குருமூர்த்தி எழுதிய கட்டுரையின் தாக்கம்
- ஆளுநர் பதவியும், ஒரு கேலிக்கூத்தும்
- காஞ்சி சங்கராச்சாரியார் கைது
- சங்கடமடமான சங்கரமடம்
- சகுந்தலா சொல்லப் போகிறாள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -46
- வெகுண்டு
- செக்கென்ன ? சிவலிங்கமென்ன ?
- அறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து
- போரும் இஸ்லாமும்
- செயேந்திரரும் அவரின் சீட கோடிகளும்
- நெஞ்சுக்குள்ளே ஆசை
- ஒப்புமை சைகையும், இலக்கமுறை சைகையும்
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்
- பாப்லோ நெரூடாவின் கவிதை : மாச்சு பிச்சுவின் மலை முகடுகள்
- இந்தமுறை
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 3- பெண்புகல்பரிசு
- கீதாஞ்சலி (4) சிறைக் கைதி! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பெரியபுராணம் – 18 : 2.தில்லைவாழ் அந்தணர் சருக்கம்
- நன்றி, சங்கரா! நன்றி!!
- எலிமருந்துக்காரனின் பகல் சாப்பாட்டு நேரம் – அருண் கொலட்கர்
- மீரா – அருண் கொலட்கர்
- புரூட்டஸ்