கவிதைகள்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

மதியழகன் சுப்பையா


பேசித் திரிகிறார்கள்.

பென்சி பற்றிப்
பேசுகிறாள் ஜோ

ஜோ பற்றிப்
பேசுகிறார் பென்சி

பென்சி- ஜோ பற்றிப்
பேசுகிறாள் பிரகாஷி

பிரகாஷி பற்றிப்
பேசுகிறாள் தீபா

எல்லோர் பற்றியும்
பேசுகிறான் அஜய்

ஒருவர் பற்றி
மற்றொருவர் பேச
மகிழ்ந்து கழிகிறது
அவர்களின் பொழுது

பேசாமலும்
பேசப்படாமலும்
இருக்கிறான்
இயங்குகிறான் மதியழகன்.

—-

இன்னும் தொடர்கிறது
என்றோ தொடங்கிய கவிதை

அனுபவங்களை விழுங்கி
பலப்படுகிறது

எத்தனை புசித்தாலும்
பசித்தே அலைகிறது நாளும்

எழுதுபவரின் ஆயுள்
முடியலாம்
கவிதை இறவாது

இன்றோ, நாளையோ
நான் மரித்து விடுவேன்
இன்னும் தொடரும்
அந்தக் கவிதை
என்றும் தொடரும்.

மதியழகன் சுப்பையா

madhiyalagan@rediffmail.com

Series Navigation

author

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா

Similar Posts