நடை

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

க.லெட்சுமி நாராயணன்.


தனியே நீண்ட நடையில்,
எனனை ஆசுவாசப்படுத்த முயலுகிறேன்.
அலைக்கழியும் நெருப்பாய் சலனம்.
முடிவுறா கற்பனையின் விடுபட்ட கண்ணியில்,
என்னை தொடுக்கிறேன்.
முறுக்கி தவித்த தாத்தா,
திக்கற்று சுழன்ற பெரியம்மாவின் கண்கள்.
வடுவாய் நினைவில்.
‘இடைவெளியின் ‘ தெளிவு எங்கோ மங்கலாய்.
உரத்து சிரிக்கும் பெண்ணின் சிரிப்பில்,
அதிர்ந்து கலைகிறது மெளனம்.
க்ஷணத்தில் கரையாமல், மரணங்களில் வாழ்கிறது மனம்.
இருந்த பயத்தை எழுத்தில் இறக்கி,
சக்கையாய் சரிகிறேன் நான்.
—-
klnarayan@yahoo.com

Series Navigation

author

க.லெட்சுமி நாராயணன்

க.லெட்சுமி நாராயணன்

Similar Posts