கோமதி நடராஜன்
எல்லோருக்கும் நல்லவனாக இரு என்று
எல்லோரும் சொல்கிறார்கள்.
இருந்துதான் பார்ப்போமே.
விழுந்தவனைத் தூக்கி நிறுத்தித்
தூணாகத் துணை நின்றேன்.
அவனைத்,தள்ளிவிட்டவனுக்கு நான்
தப்பானவனானேன்.
அடிபட்டவனை அரவணைத்து
ஆறுதல் கூறி ஆற்றினேன்.
அவனை,அடித்தவனுக்கு நான்
ஆகாதவனானேன்
அழுதவனை அருகிலிருத்தி
விழிநீரைத் துடைத்தெறிந்தேன்.
அவனை அழவைத்தவனுக்கு நான்
அதிகப்பிரசங்கியானேன்.
ஒரே காரியத்தினால்,நான்,
ஒருவனுக்கு வேண்டியவனானேன்
மற்றொருவனுக்கு வேண்டாதவனானேன்.
‘எல்லோருக்கும் நல்லவனாக இரு ‘
எல்லோரும் சொல்கிறார்கள்.
ஒரு நாள்-
அடித்தவன் அடிபட்டு நின்றான்,
படட்டும் என்று ஓடவா ?
பக்கத்தில் சென்று தேற்றவா ?
அழவைத்தவன் அழுது நின்றான்
அழட்டும் என்று விடவா ?
அள்ளி அணைத்து ஆற்றவா ?
தள்ளிவிட்டவன், விழுந்து கிடந்தான்
கிடக்கட்டும் என்று போகவா ?
கிட்டே சென்று தூக்கவா ?
இவர்களுக்கு நண்பராகவா ?
அவர்களுக்குப் பகைவராகவா ?
இயலாத ஒரு காரியத்தை,எல்லோரும்
மிக எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள்
‘எல்லோருக்கும் நல்லவனாக இரு ‘
—-
ngomathi@rediffmail.com
- ஓவியப் பக்கம்- மூன்று : பிலிப் கஸ்டன் (Philip Guston) – இனவாதத்தின் எதிர்ப்புக் குரல்
- திலகபாமாவின் ‘நனைந்த நதி ‘ சிறுகதை தொகுதி வெளியீடு- ஹோட்டல் சிதம்பரம், சிவகாசி 31.10.04, ஞாயிறு மாலை 5 மணி
- நாணயமா ? நமக்கா ? – நான் சொல்வதெல்லாம் நம்பிடும் உடன்பிறப்பே பொங்கியெழு
- ஆட்டோகிராஃப்- 23-இதயம் என்றொரு ஏடெடுத்தேன் அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்!!
- அமெரிக்காவில் அல்பங்கள் ஆயிரம்…
- எழுத்து வன்முறை
- மெய்மையின் மயக்கம்-22
- இருளிலிருந்து பேரிருளுக்கு
- புதுவை ஞானத்தின் கட்டுரை : நீதாம், பாரம்பரிய அறிவு – ஒரு குறிப்பு
- மக்கள்தெய்வங்களின் கதைகள்-6 -பிச்சைக்காலன் கதை
- கடிதம் அக்டோபர் 21,2004 – ஜெயமோகனின் அபத்தங்கள்!
- கடிதம் அக்டோபர் 21,2004
- கடிதம் அக்டோபர் 21,2004 -பகவத் கீதையைச் சுற்றி நடக்கும் மதச்சார்ப்பற்ற சித்து விளையாட்டுக்களுக்கு சில பதில்கள்
- நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் – ஓர் பார்வை
- அழியாத குற்றங்கள்
- கவிதை
- சாலை
- பெரியபுராணம் – 14 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)
- இருந்திருக்கலாம்..ம்ம்
- காலச்சுவடு – மாத இதழாகிறது
- கடிதம் அக்டோபர் 21,2004 – ஜெய மோகனின் கீதை
- கடிதம் அக்டோபர் 21,2004 – அன்பிற்குரிய மெமிட்டிக் க்ளோன்களுக்கு
- வெ.சா. – சு.ரா. விவாதம்: சில குறிப்புகள்
- தந்தை தாயான கதை
- சாலை
- கீதாஞ்சலி (1) (உடையும் பாண்டம்) மூலம் : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- தியாகத் திருவுரு வீர சாவர்க்கர்
- கலைஞர் தயவில் மீண்டும் மும்மொழித்திட்டம் : வாழ்த்துவோம் வரவேற்போம்
- வாரபலன்- அக்டோபர் 21,2004 – லதா நாயரின் வி ஐ பி படலம், யானைக் கடன் படலம், அரபிப் பொன் படலம்
- தூதன்
- நெருப்புக் கோழி
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 42
- சுதந்திரம் என்றால் என்ன ?
- கவிதை
- கவிக்கட்டு 32-வாழ்க்கை வியாபாரம்
- ‘விண் ‘-தொலைக்காட்சிக் கவிதை – 2 எங்கள் கிராமத்து ஞானபீடம்
- அ.முத்துலிங்கம் பரம்பரை -5
- உரத்த சிந்தனைகள்- 4
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (5)
- சரித்திரப் பதிவுகள் – 4 : ஐ.என்.எஸ். தரங்கினி
- அறிவியலில் தன்னுணர்வுத் தேடல் – ஒரு எளிய பறவை நோக்கு
- துடுப்புகள்
- ஒத்திகை
- அஃறிணைகள்
- அய்யோ…. அய்யோ….
- அது மறக்க முடியாத துயரம்..