கவிதை

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

சுமதி ரூபன்


ஒரு சமாந்தர உலகில் அவனும் அவளும்
வாழ்ந்து வருகின்றார்கள்.
இரவு பகலும்
குளர் வெயிலும்
கடந்தது அவர்கள் காதல்.
முற்றிலும் மனிதத்துடனும் தனக்கான பெருமைகளுடனும்
பெண்ணைப் புரிந்து கொண்டவன் அவன்.
அவளுக்காகவே தனது மார்பு முடிகளையும் சிரைத்தவன்.
அறையை அடைத்துக் கிடக்கும்
மின்னும் குதியுயர்ந்த சப்பாத்துக்களில்
நொந்து போயிருக்கும் அவள் பாதங்கள்.
கைகளும் கழுத்துமற்றுத் தொங்கும்
தாராள உடைகளில் எப்போதுமே
அவனுக்காய் வேண்டி தேவதையாவாள்
அவனுள் அமிலம் சுரக்க
பூனைக்கண்களும் செயற்கை நிகங்களும்
அவளிற்கு பரிசாகும்
முகத்துாக்கலற்ற அவன் புரிந்துணர்வில்
அவளின் மோகிப்பும் விசாலப்படும்
கிழித்த சிலிக்கோண் முலைகளில் மூழ்கி
இறுகிய தொடைகளுள் தன்னைப் புதைத்து
பெண்ணியம் பற்றிக் கவிபாடும்
அவன் திறமையில்
அவள் பிரமித்து முயங்குவாள்.

சுமதி ரூபன்

Series Navigation

author

சுமதி ரூபன்

சுமதி ரூபன்

Similar Posts