கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

கோமதி நடராஜன்


மண்ணில் விழுந்த,
மழைத்துளியின்
சலசலப்பு,
எல்லோர் காதிலும்
இசைத்தது,
அமிர்தவர்ஷிணி ராகத்தை.
—-
நடுநிசியில் பெய்த மழை
வானழாவ மகிழ்ச்சியை
மனதில் எழுப்பியது.
மறுநாள் அதிகாலை,
‘குடை ரிப்பேர் ‘என்று
புறப்பட்ட ஏழையின்,
குரல் இதயத்தைத் தொட்டது.
—-
ரயில் பயணத்தில்,
இறங்கவேண்டிய நிலையம்
வந்து விட்டால்
உற்சாகமாய் இறங்கியவன்,
வாழ்க்கைப் பயணத்தில்
இறங்க வேண்டிய நிலையம் வந்தால்
நிலை குலைந்து போவதேன் ?
—-
சொத்தென்ற சிறுகல்
சொத்தென்று விழுந்தது.
ஒற்றுமையாய் உணவருந்திக்
கொண்டிருந்த,
சிட்டுக்குருவிகள்
திசைக்கொன்றாய்,
பறந்தன.
—-

Series Navigation

author

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்

Similar Posts