சத்தி சக்திதாசன்
உன்னைச் சுற்றி ஓர் உலகம்
உருளுவதே இயக்கம்
உருண்டையே வடிவம்
உண்மைக்கு அதனுள் விலை என்ன ?
கனவிலோர் உலகம்
கண்ணயர்வில் விழிக்கும் உலகம்
கண்விழிப்பில் உறங்கும் வையம்
கனவுகள் நிழலின் நிகழ்வுகள்
ஏழ்மை உலகம்
ஏக்கம் அங்கேதான் பிறப்பு
எதிர்பார்ப்புக்கள் அங்கு இறப்பு
ஏமாற்றங்கள் உறைவிடம்
எந்நாளும் மறையா வறுமை
கோதையர் உலகம்
கொண்டாட்டம் காதலில்
கொண்டுவா சீதனம் என்றதும் திண்டாட்டம்
கொடுங்காவல் சிறையில் பூட்டும் தாலி
கொந்தளிக்கும் உணர்வுகள்
கொடுப்பதெல்லாம் கண்ணீரே !
சிறியவர் உலகம்
சிரிப்பினில் தவழும்
சிந்தனைகள் தெளிந்தவை
சினமறியா நெஞ்சங்கள்
சீராடும் அன்பினில்
பெற்றோரின் அகிலம்
பெறாத மகிழ்வுகள்
புரியாத தியாகங்கள்
பித்தான புத்திகள்
பிள்ளைகள் மனமோ பாறைகள்
இளைஞரின் மேதினி
இனிக்கும் கல்லூரி நாட்கள்
இசைக்கும் இதயங்கள்
இடிக்கும் தத்துவங்கள்
இல்லாத எதிர்காலம்
இறக்காத லட்சியங்கள்
இவ்வுலக நாளைகள்
கவிஞனின் உலகம்
கணநேர உணர்ச்சிகள்
காகிதத்தில் காவியங்கள்
கடைசிவரை வாழ்வுப் போராட்டம்
கனவுகளின் உயிராக்கம்
உன்னைச் சுற்றிய உலகம்
உருண்டுகொண்டே
உள்ளே நீ உன் பாதையும் வட்டமே
விட்டதை மீண்டும்
தொட்டது அடுத்தொரு சுற்றில்
உண்மையான நிலையிது அறிவீரோ !
0000
விழித்தெழும் உணர்வுகள்
சத்தி சக்திதாசன்
விளையாடும் காலங்கள் வினையான கோலங்கள் விளங்காமலே
வியக்க வைத்த ஞானங்கள் விழித்தெழும் உணர்வுகள்
விசையோடு விரைந்திடும் வாலிபத்தின் வயதுகள் மறைந்தோடி
விலையாகா அனுபவங்கள் விழிதெழும் உணர்வுகள்
வீணான காலங்கள் விளையாட்டில் ஓடிய பருவத்தின் வனப்புக்கள்
விந்தையான மனிதர்களின் விழித்தெழும் உணர்வுகள்
விபரமற்ற செய்கைகள் துயில மறுத்த சீற்றங்கள் பாகமாக படிந்ததந்த
வீசி அடித்த வாசங்கள் அவை விழித்தெழும் உணர்வுகள்
விழிகள் தோறும் நிரம்பிய யுவதிகளின் தோற்றங்கள் வாழ்வு இதுதான் என
விவேகமற்ற சிந்தைகள் இன்று விழித்தெழும் உணர்வுகள்
விடியும் வேளைகள் வலம் வந்த நேரங்கள் விசிறி அடித்து நினக்க மறந்த
வீணையொன்று தந்தியற்ற கோலம் போல விழித்தெழும் உணர்வுகள்
0000
sathnel.sakthithasan@bt.com
- கடிதம் அக்டோபர்,7 2004
- கடிதம்- அக்டோபர் 7,2004
- கடிதம் அக்டோபர் 7,2004
- பதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி!
- அப்புசாமியும் சனிப் பெயர்ச்சியும்
- ஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை!”
- சொன்னார்கள்
- ‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.
- நான் பாடகன் ஆனது
- உரத்த சிந்தனைகள்- 2
- மெய்மையின் மயக்கம்-20
- கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்!
- புகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்
- கடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்
- அ.முத்துலிங்கம் பரம்பரை-3
- கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? – பகுதி 1
- எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3
- எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2
- எஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1
- ஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்
- தங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- கடிதம் அக்டோபர் 7,2004
- கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா ?
- கடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)
- ‘போரோடு ‘ ஒரு போர். ( ‘Bohr ‘s Model and Theoretical Warfare on Quantum Mechanics)
- சென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)
- யாரிந்த Dick Cheney ?
- அல்லி-மல்லி அலசல்- பாகம் 5
- பாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு
- யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்
- உறவெனும் விலங்கு
- காட்டு வழிக் காற்று
- சாகா வரம்
- வாலிபத்தின் வாசலில்
- விவாகரத்து
- கவிதைகள்
- அவள்
- பெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)
- மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ?
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)
- யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்
- தனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு
- ‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்
- சாமிக்குத்தம்
- உன்னைச் சுற்றி உலகம்
- காற்றுப் பை…
- வேலிகள் உயரும்
- பழைய வேட்டி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40