அவள்

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

வீரமணி இளங்கோவன்


நிமிர்த்த முடியாத
நாய்வாலைப் போல

விலக்கினாலும்
திரும்பத்திரும்ப
அவளையே சுற்றுகின்றன நினைவலைகள்!

பள்ளம் நோக்கிப்பாய்கின்ற
ஒரு நதியைப்போல
அவளை நோக்கியே பாய்கின்றன எண்ணங்கள்!

பள்ளிவிட்டதும்
ஓடிவந்து அம்மாவைத் தழுவிக்கொள்கிற
ஒரு குழந்தையைப்போல
அவளையே போய்த்தழுவிக்கொள்கின்றன ஞாபகங்கள்!

நில்லாது சுற்றுகின்ற
ஒரு கடிகாரமுள்ளைப்போல
இடைவிடாது அவளையே
நினைத்துக்கிடக்கிறது நெஞ்சு!

பூ
வாசனையைச் சுமந்துக்கொண்டிருப்பதைப்போல
மனம்
அவள் நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறது!

சுடுமணலாய்க் கிடக்கிறேன் நான்!
மழைத்துளியாய்ச் சொட்டுகிறது
அவள் நினைவுகள்!
வீரமணி இளங்கோவன்
சிங்கப்பூர்
veeramanielango@hotmail.com

Series Navigation

author

வீரமணி இளங்கோவன்

வீரமணி இளங்கோவன்

Similar Posts