வந்தியத்தேவன்
மனித நேயம்
– வந்தியத்தேவன்
புழக்கடை இறுக்கமாயிருந்தது வெக்கை வெளியிலா
துணைவியின் இடை வெளியிலா
விளங்கவில்லை வெளியே வந்தேன்
மாதக்கடைசியாய் கும்மிருட்டு பயமுறுத்தியது
ஈனஸ்வரத்தில் நம்பிக்கை தெருவிளக்காய் மினுக்கியது
சேருமிடம் தெரியாமல் நடக்கும்போது
ஞானியாயுணர்ந்தேன் நம்புங்கள்
கழுதை விட்டுப்போன குட்டிச்சுவற்றில் சப்தம்
இதென்ன ஒன்று இரண்டென கதம்பக் குரல்கள் ?
பொதுக்கழிப்பறை சுவாரசியத்தில்
எட்டிப் பார்க்கும் மனம் கட்டுப்படவில்லை
கார்த்திகை மாதக் களைப்பில் தாய்
குட்டிகள் முலைக்காம்புகளுடன் மோதல் நடத்தின
தெரு நாய்க்கு உணவில்லையெனில்
ஜகத்தினையழிக்க எவனாவது சபதமா பூண்டான் ?
உள்ளுணர்வு உந்த ஆபத்தோவென
தாய்நாய் எழும்ப குலைப்பு மட்டும் பயமாயில்லை
கர்ப்பத்தில் ஊட்டச்சத்துணவு கிட்டவில்லை போலும்
இல்லத்தில் பழையது இரவு வைத்தால் ஊசிவிடும்
நாய்க்கிடலாமென்றால் வெக்கை மீண்டும் வெளிப்பட்டது
போன பிறவியில் புரவலனாய் நொந்திருப்பேன்
ஆந்தையாய் மாறி உலவியபின் இரவில் கோழித்தூக்கம்
புழுக்கம் மட்டும் இன்னும் இறுக்கமாய்
அன்றாட அலுவலுக்கு பலியாடாய் சிங்காரிப்பு
பழக்கமான பாதை பார்த்துச் சலித்த முகங்கள்
கேட்டு மரத்த சப்தங்களில் மொய்க்கும் ஈக்களின் சப்தசுரம்
நிமிர்ந்து பார்த்தேன் ஏதாலோ அடிபட்டிறந்த தாய்நாய்
உள்ளே புரியாத பாகமொன்று மளுக்கென்று ஒடிந்தது
பழசு போட்டிருந்தா புழக்கடையிலே தூங்கியிருக்குமோ ?
புதுசாய் கண் திறந்த குட்டி முறைத்தது
வளர்ந்தபின் என்னை கட்டாயம் கடிக்கலாம்
எதிலும் அடிபட்டிறக்காமலிருந்தால்
கானல் கனவு
– வந்தியத்தேவன்
இருட்டறையில்
அகல்விளக்கு
இருளைக்
கொன்றதாய்
இறுமாப்பு
அமைதியாய்
அதனடியே
ஆடியது
நிழல்
====
t_sambandam@yahoo.com
- கடிதம் செப்டம்பர் 9,2004
- GMAIL ஒரு பார்வை.
- நெரூதாவும் யமுனா ராஜேந்திரனும் நானும்
- சமூக சேவையும் அரசியல் அதிகாரமும்:(அ) வை.கோ தமிழக முதல்வராகும் கட்டாயம்.
- கடிதம் செப்டம்பர் 9,2004
- வீர சாவர்க்கர் குறித்து ஒரு இடதுசாரி சிந்தனையாளரின்எதிர்வினை (ப்ரண்ட்லைன் பத்திரிகையில் (ஆகஸ்ட்-3 – 16, 2002) வெளியான கடிதம்)
- கடிதம் செப்டம்பர் 9,2004
- ஆட்டோகிராஃப் -17 : “ஊருக்குப் போன பொண்ணு உள்ளூரில் செல்லகண்ணு கோவில் மணி ஓசை கேட்டாளே”
- வருணாசிரமமும் ‘கருணாசிரமும் ‘
- இஸ்லாம் பயங்கரவாதத்தை எதிர்க்கிறது (Islam denounces Terrorism) ஹாருன் யஹ்யாவின் ஆவணப் படம்
- ஒரு வெங்காயம் விவகாரமான கதை.
- கடிதம் செப்டம்பர் 9,2004 – தாஜூக்கு..
- ஜெயமோகனின் ஏழாம் உலகம்
- நில அதிர்ச்சி – ஒரு அனுபவம்
- முதலிடம்
- சிறியதில் மறைந்த பெரிது
- கவிதைகள்
- தனிமை
- கடிதம் செப்டம்பர் 9,2004 – இந்து சமுதாயத்தை இழிவுபடுத்தும் கருணாநிதி
- காகிதங்கள் + கனவுகள் = மீரா
- மெய்மையின் மயக்கம்-16
- உரத்துப் பேச….
- ஒரு தலைராகம்
- போட்டோக் கவிதை…
- சொற்களை அடுக்கியக் குப்பைகள்
- பயணங்கள்
- பெரியபுராணம் – 8
- கற்பூரவாசனை
- ஆடை மொழி
- ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்
- சத்தியின் கவிக்கட்டு-24
- நடவு நாள்…
- செப்டம்பர் 11 பாரதி நினைவு தினம் பாரதியின் ஆன்மீகம்
- ஆய்வுக் கட்டுரை: கீழப்பாவூர் கள ஆய்வும் கண்டுபிடிப்புகளும்
- ஒரு கூட்டமும் அதன் மீதான காட்டமும் :காலச்சுவடு x உயிர்மை
- இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி உற்பத்தி [Nuclear Energy in the Twenty First Century]
- உணவாகும் நச்சு
- கார்பன் நானோ குழாய்களை தெரிந்துகொள்வோம்
- சரித்திரப் பதிவுகள் – 1
- கோவிந்தா..க்கோவிந்தா!!
- நீலக்கடல் -(தொடர்)-அத்தியாயம் 36