தனிமை

0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

பாஷா


கோட்பாடுகள்,வரையறைகள்
விதிகள் இவைகளாலான
மாயப் பெட்டிக்குள்
அனைத்தும் அடங்கிவிட்டிருக்கிறது
அகண்ட அண்டத்தையும்
சங்கிலியாய் இனணக்கும்
அன்பும்….

சமூக ஏற்றதாழ்வுகள்,செய்நன்றி
சிலகூட்டல்கள்,சிலகழித்தல்களென
சாயமாறிப்போனது நட்பு
தோழமை எப்பொழுதும்
தொடரும் தெருநாயின் கண்களோடு
தேங்கிவிட்டது!

காற்றில் அலையும்
காய்ந்த சருகாய்
அலைபாயும் காதல்
பணத்தின்மேல் பவனிவரும் பாசம்
தெருக்களிலும் திண்ணைகளிலும்
பிச்சைபாத்திரமேந்தும் பெற்றோர்….
அழ மறுத்தது
கண்ணீர் வற்றியதாலல்ல
இதயம் ஈரம்தொலைத்து
இரும்பாகிப்போனதால்!

பிறக்கும்போது மட்டுமல்ல
மரிக்கும்போது மட்டுமல்ல
வாழும்போதும்
தனிமை மட்டுமே
நிரந்தரம்!

—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation

author

பாஷா

பாஷா

Similar Posts