பவளமணி பிரகாசம்
அழைக்கின்றான் என்னை
உருவத்தைக் காட்டாமல்
குரல் மட்டும் கேட்கிறது
நினைவு தெரிந்த நாள் முதல்
நிழல் போல் தொடர்வது
நிச்சயமாய் தெரிகிறது
நேருக்கு நேர் முகம் காண
நெருங்கிய பல நொடிகள்
சந்திக்க நேராமலே
சங்கமம் நிகழாமலே
நழுவி விட்டன எப்படியோ
கண்ணாமூச்சி காட்டுகிறான்
கைப்பிடிப்பான் நிச்சயமாய்
என்னை ஒட்டி வரும் அவன்
என் ஒரே மெய்க்காவலன்
மெய்யான ஓர் காதலன்
என் உயிரை கேட்கிறான்
அடையாமல் விடமாட்டான்
கூடிட நானும் நாணி
ஓடி ஒளிவதை ரசித்தே
துரத்தும் ஆளவந்தான்
அவன் கையணைப்பில்
அமைதி காண வருவேன்
என்றறிந்து காத்திருக்கும்
ஏமாறாத எமகாதகனை
நீங்கா நினைவாய் ஆனவனை
நிதமும் எண்ணி நகைக்கிறேன்
நிறைந்த மனதுடன் நிற்கிறேன்
மங்கல நாளிலே கைத்தலம்
பற்றிடுவான் என் கொற்றவன்
Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com
- துர்நாற்றம்
- மாணிக்க விநாயகர் கோவில் பாரிஸ்
- கடிதம் செப்டம்பர் 2, 2004
- கடிதம் செப்டம்பர் 2,2004 – சன் டிவியின் சர்வாதிகாரம்
- கடிதம் செப்டம்பர் 2, 2004 – இத்தாலிய மாதா கீ ஜே!
- தென் இலங்கை கவிதை நூல் வெளியீடு
- கடிதம் செப்டம்பர் 2, 2004 – அரவிந்தன் நீலகண்டனுக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும்…
- கருணாநிதி, பரத்வாஜ், வைரமுத்து – ஏன் இந்தச் சிரிப்பு
- சொன்னார்கள் செப்டம்பர் 2, 2004 – தொகுப்பு
- ஆட்டோகிராஃப் 16-ஒரு கதாநாயகி கதை சொன்னாள்
- மெய்மையின் மயக்கம்-15
- கடிதம் செப்டம்பர் 2, 2004
- யேசுமாதா போன்ற முகம்
- இந்த வாரம் இப்படி (செம்டம்பர் 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ
- ஈரடி கவிதைகள்
- நம்பிக்கை துரோகி
- நிலாச் சோறு
- அமெரிக்கா…! அமெரிக்கா…!!
- வீடு
- வலை
- வலை
- …. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)
- வேறுபாடு….!
- பெரியபுராணம் – 7
- சாகர புஷ்பங்கள்
- சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்
- கடவுள் வழிபாடும், தனிநபர் வழிபாடும்
- மாறிவரும் ராஷ்டிரபதி பவன்
- குடியரசு தலைவர் அப்துல் கலாம் – மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்
- மஞ்சுளா நவநீதனின் தேடலும் இடறலும்
- ஊருப்பொண்ணு
- தோல்விக்குப்பின்
- மாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 35
- எங்க ஊரு காதல பத்தி…
- பதவி உயர்வு
- அன்புடன் இதயம் – 30
- விடியும்
- ஊரறிய மாலையிட..
- பொற்கோவின் ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ – நூல் மதிப்புரை
Thinnai – Weekly Tamil Magazine - சென்னை நீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உருவாகட்டும் [Desalination Plants for Chennai
- பூச்சிகளின் சுய மருத்துவம்
- உயிரிடம் ஒரு சந்தேகம்….
- கவிக்கட்டு 23
- நூல் வெளீயிடு
- வலை
- காதலன்
- வலை
- தவறாக ஒரு அடையாளம்