பவளமணி பிரகாசம்
பல்கலை கழகங்கள் பல கட்டி
பல் மொழிகள் செம்மையாய்
வளர்கின்ற வழக்கமுண்டு-
இலக்கணங்கள் ஏதுமின்றி
இதிகாச சுவை மிஞ்சி
ஈடின்றி இணையின்றி
எதுகை மோனை துணையின்றி
ஏதுவான இணைப்பாவது
எக்காலமும் உவப்பானது
அவனியெங்கும் அறிந்தது
எம்மொழி என்றறிவீரோ
கன்னியரின் கன்னல் மொழியல்ல
காதலின் கள்ளொக்கும் மொழியல்ல
குழலை விஞ்சும் மழலை பேசும்
மணியான மொழியே அது
ஒலிகளின் கூட்டே வார்த்தையாய்
பண்டங்களின் பெயர்கள் அதிலே
பக்குவமாய் அவிந்திருக்க
ஆண்பால் பெண்பால் மயக்கமுற
வல்லினமும் மெல்லினமும் மருவிட
இடையினத்தின் இடுக்கிலே
பாதிப்பெயர் மட்டும் நீட்டி
ஒயிலானதோர் உச்சரிப்பைக் கூட்டி
வண்டொத்த கண்களால்
சுட்டுகின்ற சிறு விரலால்
காட்டிய பொருளை தெரியாமல்
பொருள் புரியாமல் போனதுண்டோ
அகராதி அறியாத வார்த்தைகள்
அழகான ஒலி சேர்க்கைகள்
அத்தனையும் தேன்கனிகள்
பச்சைக்கிளியாய் ஒப்புவிக்கும்
பல சொல்லும் அதிசயங்கள்
சொல்லிக் கொடுத்த சொற்களன்றி
சொல்லித்தராத பல பாடங்கள்
சிறு செவிக்குள்ளே செல்வதுண்டு
சித்திரம் போலவே செப்புவதுண்டு
சிதைந்து போன வார்த்தைகள்
இத்தனை இனிப்பானவையா
விசித்திர ஒலிச்சேர்க்கைகளில்
வானவில்லின் ஒளி சிந்துது
கோடி இன்பம் ஒளிந்திருக்கும்
குழந்தை மொழியினை கேட்டிட
கொடுத்து வைத்திருக்க வேண்டுமே
Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com
- குறுந்திரைப்பட விழா
- கடிதம்
- தமிழ் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பின் இடம் – கருத்தரங்க அழைப்பிதழ்
- கடிதம்
- கடிதம்
- அன்புள்ள திரு.வாசனுக்கு,
- APPEAL – FUND RAISING FOR THE LEGAL BATTLE IN THE SATI CASES
- யார் இந்த தாரிக் அலி ?
- மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை
- கடிதம் -07-12-2004
- யானையப் பற்றிய ஆய்வுக்கட்டுரையும் அதன் எதிர் வினைகளும்!
- ஒரு கனவு துகிலுரிகின்றது
- முகவரி
- பயணம்
- மொழி
- தீர்க்கமும் தரிசனமும்
- ஓட்டம்!
- அன்புடன் இதயம் – 27 – திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்
- சுட்டெரிக்கும் மனசாட்சி
- அன்புடன் தாய்க்கு
- முன்னேற்றம்
- பெரியபுராணம் – 4
- சிங்காரச் சிங்கை
- வா வா வா…!!!
- ஆட்டோகிராஃப் – 13- மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
- தமிழில் பாப்லோ நெருதா: சில குறிப்பகள்.
- பேரிடர் விழிப்புணர்வுக் கல்வி
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 1
- புதுச்சேரி (புதுவை, பாண்டிச்சேரி) நினைவுகள்
- ஜமாத்தின் அதிகாரம் என்ன ? ஜமாத் தேவைதானா ?
- பொடாவுக்கு ஒரு தடா!
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 32
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- சொர்க்கத்தில் கல்யாணம்
- கணேஸ்மாமா
- எலிசெபத் ஏன் அழுதாள்
- நீ சொல்லு
- வேடத்தைக் கிழிப்போம்-6 (தொடர் கவிதை)
- உயிர்க்கொல்லி
- திருக்குறள் ஒரு மறை நூலா ?
- மெய்மையின் மயக்கம்-12 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
- தந்தை இல்லா தலைமுறைகள்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – 6
- அடக்கம்
- ஆற்றுவெள்ளம் ஆசையானால்
- நினைவார்ச்சனை – கவிக்கட்டு 19
- நேர்த்திக்கடன்
- குருவிகள்
- காம்பின் எடையால் பூவின் இடை ஒடியும்!
- மாற மறுக்கும் மனசு