பட்டுக்கோட்டை தமிழ்மதி
நடை பழகிய பின்னும்
நடை பழக்கம்.
கைப்பிடித்து நடக்க
கைக்கொடுத்து நடக்க
தொட்டில் குழந்தையை
தொட்டுத்தூக்க
தோல்மீது அணைக்க
தலைத்தூக்கும் குழந்தையை
தவழும் குழந்தையை
நிற்க
எழும் குழந்தையை
நின்று
விழும் குழந்தையை
விழுந்து பிடிக்க
குழந்தியோடு குழந்தையாய்
எந்திரமே….
என்னோடு நீயும்
உன்னோடு நானும்.
எந்திரமே….
பழகிவிட்டோம் நாம்.
பாசத்தில் பின்னிப்பிணைந்து
பள்ளிநாள் பிள்ளைகளாய்
பறந்தோட தொடங்கிவிட்டோம்.
நெடுந்தூரம் போக
நீயும் நானும் நினைத்துவிட்டோம்.
உனது எனது கரங்களால்
ஒரு கணம் ஒரு கனம்
நகர்த்தினோம்.
இந்த உலகம் புரட்டும் நெம்புகோலை
ஒன்றாக அசைத்தோம்.
ஒடி ஒடி
ஒன்றாக ஓய்வெடுத்தோம்.
என்னை நீ
உழைக்கவைத்தாய்.
உலகம் மறந்து உறங்க வைத்தாய்.
நிம்மதியான தூக்கம்
நிச்சயம் உழைப்பவனுக்கு மட்டுமென
நினைக்கவைத்தாய்.
முடியாததை
என்னோடிருந்தென்னை
முடிக்கவைத்தாய்.
என் வெற்றி நீ.
நீயிருக்க நானிருக்க
என்
நம்பிக்கை நீ.
இடறும்
வழிவழியான வழிதனை மாற்ற
என்
புரட்சி நீ.
தூங்கி ஒவ்வொரு நாளும்
உன் நினைவில் எழுகிறேன்.
என் இதயம் நீ.
என்
இதய எந்திரமே….
பழகிவிட்டோம் நாம்.
நெடுந்தூரம் போக
நீயும் நானும் நினைத்துவிட்டோம்.
tamilmathi@tamilmathi.com
- குறுந்திரைப்பட விழா
- கடிதம்
- தமிழ் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பின் இடம் – கருத்தரங்க அழைப்பிதழ்
- கடிதம்
- கடிதம்
- அன்புள்ள திரு.வாசனுக்கு,
- APPEAL – FUND RAISING FOR THE LEGAL BATTLE IN THE SATI CASES
- யார் இந்த தாரிக் அலி ?
- மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை
- கடிதம் -07-12-2004
- யானையப் பற்றிய ஆய்வுக்கட்டுரையும் அதன் எதிர் வினைகளும்!
- ஒரு கனவு துகிலுரிகின்றது
- முகவரி
- பயணம்
- மொழி
- தீர்க்கமும் தரிசனமும்
- ஓட்டம்!
- அன்புடன் இதயம் – 27 – திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்
- சுட்டெரிக்கும் மனசாட்சி
- அன்புடன் தாய்க்கு
- முன்னேற்றம்
- பெரியபுராணம் – 4
- சிங்காரச் சிங்கை
- வா வா வா…!!!
- ஆட்டோகிராஃப் – 13- மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
- தமிழில் பாப்லோ நெருதா: சில குறிப்பகள்.
- பேரிடர் விழிப்புணர்வுக் கல்வி
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 1
- புதுச்சேரி (புதுவை, பாண்டிச்சேரி) நினைவுகள்
- ஜமாத்தின் அதிகாரம் என்ன ? ஜமாத் தேவைதானா ?
- பொடாவுக்கு ஒரு தடா!
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 32
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- சொர்க்கத்தில் கல்யாணம்
- கணேஸ்மாமா
- எலிசெபத் ஏன் அழுதாள்
- நீ சொல்லு
- வேடத்தைக் கிழிப்போம்-6 (தொடர் கவிதை)
- உயிர்க்கொல்லி
- திருக்குறள் ஒரு மறை நூலா ?
- மெய்மையின் மயக்கம்-12 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
- தந்தை இல்லா தலைமுறைகள்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – 6
- அடக்கம்
- ஆற்றுவெள்ளம் ஆசையானால்
- நினைவார்ச்சனை – கவிக்கட்டு 19
- நேர்த்திக்கடன்
- குருவிகள்
- காம்பின் எடையால் பூவின் இடை ஒடியும்!
- மாற மறுக்கும் மனசு