அநாதை

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

தீபம்கோபி


திணவு தீண்டலில்
துளிர்த்த மொட்டுக்கள்.
பொதுமை பெயரொடு
பூத்தப் பூக்கள்.

மாலையில் சேராமல்
மண்ணில் வீழ்ந்தன- இந்த
மணம்வீசும் மலர்கள்.

விதைத்தவனும் தெரியவில்லை
சுமந்தவளும் சொந்தமில்லை
படைத்தவன் இடம்தேடி
பசியோடு அலையும்
பரிதாப ஜீவன்கள்

நாங்கள்….
வெளிச்சத்தை தேடும்
திரியில்லா தீபங்கள்.

– தீபம்கோபி, சிங்கப்பூர்.
chennai1980@yahoo.com

Series Navigation

author

தீபம் கோபி - சிங்கப்பூர்.

தீபம் கோபி - சிங்கப்பூர்.

Similar Posts