கவிதை

0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

பாஷா


அக்கினிவலத்தில் ஆயிரம் வாக்குறுதிகள்
உதிர்த்த உன் வாக்குறுதியை
உருக்குலைத்ததோ தீ!
உன் வீட்டு மேசை நாற்காலியோடு
நானுமொரு ஜடமாய்த்தானே
உனக்கு தெரிகிறேன்
இன்ப துன்பத்தில் பங்களிப்பு
உண்டென்று ஏன் அன்று சொன்னாய் ?
இனி
வரும்காலத்தில் உன் முககுறிப்பு உணர்ந்து
என் தேவைகள் கேட்பேன்
தலைகோதி இதழ் பிரித்து
சிறு இடை நீ தொட
சிலிர்ப்பேன்!
எவரிடமேனும் என் கேள்விக்கு
விடை உள்ளதா ?
‘இருபத்தொரு வயதிலேயே
எனக்கு ஏன் மரணம் வந்து விட்டது ? ‘
—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation

author

பாஷா

பாஷா

Similar Posts