கோமதி நடராஜன்
பிறந்த பயன்
—-
அடுத்து அடுத்து வீசிப் பார்த்தோம்
அடுக்கடுக்காய் அடித்துப் பார்த்தோம்
ஏன் வந்தோம் எதற்கு வந்தோம்
என்றே அறியாமல் பூமியின் விளிம்பைத்
தொட்டுத் தொட்டு மறைந்தோம்.
பள்ளிச் சிறாரின் விரல் தொட்டு
கலகலவென்று சிரிக்க வைப்போம்
பல்லிழந்த மூத்தோர் பாதம் தொட்டு
ஆசிபெற்று மகிழ்வோம்.
ஆழ்கடல் சாட்சியாகக் காதலிப்போர்,
ஆடையில் ஒட்டிய மணலைத் தட்டும் போதே
காதலையும் தட்டி விட்டுச் செல்லும்,
காதலர்களென்று கண்டு வியப்போம்.
இதற்கு மட்டும்தானா நாங்கள் என்று,
எண்ணியதுண்டு-
இதற்கும் மேலாக ஏதுமுண்டா என்று
ஏங்கியதுண்டு.
இதைக் காணவா ஓயாமல் அடித்தோம் ?
இதற்காகவா உறங்காமல் ஒலித்தோம் ?
மக்கள் தண்இருக்காக வாடும் பொழுதும்
தண்இர் தேடி திணறும் பொழுதும்,
உப்புக்கரித்து, ஊருக்கு உதவாமல்,
உருவெடுத்தோமே என்று அழுவோம்
தவித்த வாய்க்குத் தண்இர் தராதவனென்று
பேரெடுத்தோமே!என்று பதறுவோம்.
சிதம்பர ரகசியமாய் இருந்த எங்கள்
ஆதங்கத்தைப் புரிந்து கொண்டார் ஒருவர்.
அவலத்தை அறிந்து கொண்டார் ஒருவர்.
எங்கள் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தமுண்டு,
எங்கள் பிறப்பிற்கும் ஒரு காரணமுண்டு
என்றெம்மை உணர வைத்தார்,
தமிழர்களின் தாகம் தீர்க்க வந்த,
தங்க மகன்.
அன்று
ஆழ்கடலில் கப்பல் ஓட்டினார்
வ.ஊ. சிதம்பரம்.
இன்று
ஆழ்கடல் நீரை அமுதமாக்கத் திட்டமிட்டார்
ப. சிதம்பரம்.
இனி
அடிக்கும் எங்கள்
ஒவ்வொரு அலைக்கும்
ஒரு அர்த்தமுண்டு.
ஒவ்வொரு அலையோசைக்குள்ளும்
ஒரு இசையுண்டு.
நாங்கள்-
பிறந்த பயனைப் பெற்று விட்டோம்
வந்த நோக்கம் புரிந்து கொண்டோம்.
வாழ்க தமிழ்!
வளர்க தமிழர்!
ஒளிர்க தமிழ்நாடு!.
—-கோமதி நடராஜன்
[லண்டன் மாநகரில் கால் எடுத்து வைத்த முதல் நான்கு மாதங்கள்,தமிழ் கேளாது வாடி நின்ற வேளையில்,பி.பி.சி.வானொலியின் தமிழ் ஒலிபரப்புச் சேவையைச் செவிமடுத்த அடுத்த கணமே என் பேனா எழுதிய வாழ்த்துமடல் இது.
1991 ஜனவரியில் லண்டன் சன்ரைஸ் வானொலியில் வாசிக்கப்பட்டது.]
—-
மரக்கலம்
====
தணியாத,தமிழ்தாகத்துடன்
தனியாக நான் இங்கு தவிக்கின்றேன்.
அடங்காத என் தாகத்துக்குத்
துளி நீரென, ‘ஸன்ரைஸ் ‘ தமிழ் தருகிறது.
பைந்தமிழ் ஆற்றில் பலமணி நேரம்
நீந்தி மகிழ எண்ணும் என் தவிப்பை
இச்சிற்றோடை நீர் எங்ஙனம் ஆற்றும் ?
தமிழ் பேசாது
நா துவழ்கிறது,
தமிழோசை கேளாது,
செவியும் செயலிழக்கிறது.
தமிழ் இல்லாத இடம் அது-
சொர்க்கமென்றாலும் கசக்கிறதே!
ஆழ்கடலில் வீழ்ந்தவனுக்கு
அற்ப மரத்துண்டும்,மாபெரும்
மரக்கலமாவது போல்
இச்சொற்ப நேரத் தமிழ் எனக்கு
உவகை அள்ளித் தருகிறது.
உலகை மறக்கச் செய்கிறது.
இரவில் தமிழொளி வீசும்
இவ்வானொலி ஆதவனுக்கு
என் மனம் கனிந்த பாராட்டுக்கள்,
இப்பணி இனிதே தொடர
என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
—-
[1989 ஆகஸ்ட், ஊட்டியில் ஒரு சாலை விபத்தில்,மயிரிழையில் உயிர் பிழைத்து ,மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பிய அடுத்த நிமிடம்,எழுதப்பட்ட கவிதை.காலனின் காலடிவரை சென்று திரும்பிய கர்வமே, என் எழுத்துக்குத் தூண்டுகோல்.]
—-
காலனே காத்திரு!
—-
எல்லோருக்கும் விடியும்
காலைப் பொழுது
எனக்காகவும் விடியுமென்று
தலையில் எழுதியிருந்தால்
மலையுச்சியிலிருந்து நான்
குதித்தாலும் -குதித்த என்னைப்
பதமாகத் தாங்கிக் கொள்ளப்
பஞ்சுமெத்தைகள் பரந்து கிடக்கும்.
அகிலத்துக்காக எழும் ஆதவன்
அடியேனுக்கும் சேர்த்து
எழுவது தொடருமென்றால்
ஆழ்கடலில் நான் வீழ்ந்தாலும்
வீழ்ந்த என்னைப்
பூவாய் ஏந்திக்கொள்ளப்
புல்தரைகள் புதிதாய் முளைத்து நிற்கும்
இழுத்து விடும் என் இறுதிமூச்சு
இன்னும் தள்ளிப் போகுமென்று
விதித்திருந்தால்,
ஆலகால விஷத்தை விழுங்கினாலும்,
நான் விழுங்கிய
விஷத்துக்கும் விஷமாகி
விடியலைக் காண விழித்தே இருப்பேன்.
—-
—-
உதிரிப் பூக்கள்.
—-
1-தானாக வந்த தீமைக்குப் பின்னே ஒரு நன்மை இருக்கும்
தேடிப் போய் பெற்ற ஒரு நன்மைக்குப் பின்னே ஒரு தீமை இருக்கும்.
2-எல்லோருக்கும் உங்களைப் பிடிக்கும் என்று நீங்கள் நினைத்தால்,யாரோ ஒரு சிலரிடம் நீங்கள் ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
3-எல்லோரையும் எனக்குப் பிடிக்கும் என்று நீங்கள் சொன்னால்,ஒரு சிலரிடம் நீங்கள் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
4- ஒரு பகைவனை நண்பனாக்குவது நூறு நண்பர்களை உருவாக்குவதற்கு சமம்.
5-பக்திக்கு அடையாளம் அன்பு,அந்த அன்புக்கு அடையாளம் மன்னிப்பு.அந்த மன்னிப்புக்கு அடையாளம் புன்னகை,அந்தப் புன்னகைக்கு அடையாளம் பளிங்குபோல் உள்ளம்.அந்தப் பளிங்கு போல் உள்ளத்துக்கு அடையாளம் பக்தி.
6-பிறரிடம் பெற்ற உதவிகளைக் கல்லில் செதுக்கி வைப்போம்,பிறருக்குச் செய்த உதவிகளைக் கற்பூரமாய்க் காற்றில் கரைய விடுவோம்.
7-நாம் சிரித்து மகிழ, நான்கு இடங்கள் சென்றால்,அடுத்தவரை, சிரித்து மகிழ்விக்க ஒரு இடமாவது சென்று வருவோம்
8-நேருக்கு நேர் நடத்தப் படும் போரை விட,பனிப்போர் ஆபத்தானது.
9-கோபத்தை,அடுத்தவரைத் தாக்கும் ஆயுதமாக எடுக்காமல்,நம்மைக் காத்துக் கொள்ளும் கேடயமாக ஏந்துவோம்.
10- ‘வயது தந்து வருவதில்லை விவேகம் ‘,இந்த உண்மைக்கு சாட்சியானார் , ஸ்வாமி விவேகாநந்தர்.
11- ‘எளிமையிலும் ஏற்றம் காணலாம் ‘ ,இந்த வாக்கியத்தை உண்மையாக்கினார்,கடமை வீரர் காமராஜர்.
12- ‘அன்பினால் உலகை ஆளலாம் ‘,இதை வாழ்க்கைக்குத் தேவையான வாக்கியமாக்கினார் அகிலத்துக்கும் பாசக் கடலான அன்னை தெரசா.
—-
கோமதி நடராஜன்.
ngomathi@rediffmail.com
- தஞ்சை ப்ரகாஷ் நான்காம் ஆண்டு புகழஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- கடிதம் ஜூலை 22, 2004
- கடிதம் ஜூலை 22, 2004 : வஹாபி இயக்கமும் வர்னாஷிரம லோகஸ்டுகளும்
- கும்பகோணத்தில் தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி : 24-07-04
- கடிதம் ஜூலை 22, 2004 – தமிழ் சங்க பேரவை
- தேர்தல், காந்தி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற
- கடிதம் ஜூலை 22, 2004 – கலைந்ததா ‘மவுண்ட் ரோடு மாஒ ‘வின் உறக்கம் ?
- கடிதம் ஜூலை 22,2004
- கடிதம் ஜூலை 22 , 2004
- ஆட்டோகிராஃப் ‘வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி ‘
- சோமரட்ண திசநாயக்காவின் ‘சின்ன தேவதை ‘ திரைப்படம்
- ஒரு தமிழனின் பிரார்த்தனை
- பெரிய புராணம்
- கொட்டு
- மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் ஆண்டுவிழாப் போட்டிகள்
- உயிர்மை ஓராண்டு நிறைவு விழா – உயிர்மை.காம் துவக்க விழா – ஜூலை 31 , 2004
- கும்பகோணம் காட்சிகள் ஜூலை 2004
- தீயே நீ தீபம் ஆகமாட்டாய்…
- கவிதைகள்
- வள்ளுவர் தந்த புதுக்கவிதை (அதி:111)– இன்பத்தின் இன்பம்(3)
- தோற்கிறேன் தான்!
- சுயதரிசனம் (26.01.004)
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- எப்போதும் சூாியனாய்
- வேடத்தைக் கிழிப்போம்-3 (தொடர் கவிதை)
- நூறு வருடம் லேட்
- அழகும் அதிகாரமும் (காதல் தேவதை-மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம்)
- இனிப்பானது
- கவிதைகள்
- அன்புடன் இதயம் – 24 – எழுதக் கூடாத கடிதம்
- கூரையைப் பிய்க்கும் குரங்குகள்!
- ஊழலின் சந்நிதியில் 100 நரபலிகள்
- தியாகிகளுக்கு கண்ணீருடன் சிரம் தாழ்த்துவோம்
- தங்கம் மனோரமா – மணிப்பூரில் இந்திய ராணுவத்தினரின் அத்துமீறல்
- பதியப்படாத பதிவுகள்
- பொய்யன் நான் பொய்யனேனே!
- அன்புள்ள ஆண்டவனுக்கு
- டாக்ஸி டிரைவர்
- சத்தியின் கவிக்கட்டு 16-நன்றாய்ப் பார்த்துவிடு
- வதங்கள்
- தீக்கொழுந்தாக….
- கொடிகள் அறுபடும் காலம்( உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை ‘-நாவல் அறிமுகம்)
- அறிய விரும்பிய ரகசியம்(எலீ வீசலின் ‘இரவு ‘ -நூல் அறிமுகம்)
- வாழ்வின் புன்னகை இந்தக் கதைகள்
- மெய்மையின் மயக்கம்-9
- கர்ணனின் மனைவி யார் ?
- மீள்பிறக்கும் உயிர்வளக் கழிவு, எருவாயு எருக்களில் எடுக்கும் எரிசக்தி [Energy from Renewable Biomass & Biogas Fuels]
- பூச்சிகளின் காதல்
- அறிவியல் தொழில்நுட்பம்:எதிர்காலத்தில் மனிதனுக்கு இயற்கை மரணமில்லை!
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்-4
- சின்னபுள்ள….
- 16-ஜூலை-04
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 29