கவிதைகள்

0 minutes, 2 seconds Read
This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

பாஷா


கல்லறை பாடல்

உனக்காக என்
உணர்வுக் கருவறையில்
உற்பத்தியாகும் வார்த்தைகளுக்கு
ஒரே முகம்தான்.
வார்த்தைகளை கோர்த்து
வாக்கியம் உருவாக்கும்
உணர்வுகளை உனக்குள்
தேடிக்கொள் தேவையெனில்
உன்னால் ஜனித்த நாளன்று
எனக்குள் உதித்த உன் உணர்வுகள்
என் கல்லறையையும்
அதன் கருவறையாக்கி
உனக்கான என் பாடலை
பிரசவித்துகொண்டிருக்கும்
ஒற்றை ரோஜாவுடன்
ஒரு நாள் வந்து
என் கல்லறை பாடலை
காதால் கேட்டு செல்!

—-

இனம்

பூங்காவிலிருந்த பூவொன்று
புயல்காற்றில் எடுத்தெறியப்பட்டு
என்மடி சேர்ந்தது

எடுத்தெறியப்பட்ட பூ
எனக்கென்று நானிருக்க
வாடும் பூ
வீடு தேடியது

வீடும்தேடும் பூ
வீசியெறியும் கண்ணீர்துளிகள்
உயிர்வேர்வரை சென்று எரித்ததால்
பிரிய பூவை மீண்டும்
பூங்காவிட்டு வந்தேன்

பின்னொரு நாள்….
பூங்காவழி செல்லும்போது
மரபுவேலி பின்னாலிருந்து
மற்ற பூக்களோடு சிரித்திருக்கும்
என் பிரிய பூவை பார்க்கிறேன்
என் உதடு முணுமுணுக்கிறது
‘பூங்காவிலிருக்க நானொன்றும் பூவில்லையே! ‘

—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation

author

பாஷா

பாஷா

Similar Posts