ஐீவன்
1.
எப்போதாகிலும்
உன் நினைவுகளில்
வந்து போகலாம்
நான்
எப்பவுமே
என்னோடு இருக்கிறாய்
நேசத்துக்குரியவளாக
நீ
கிழித்து
கூறுபோட்டு போனது
நீ சொன்னதான
வார்த்தை
உன்னோடு தொலைந்து
போயிற்று
உனக்கும் எனக்குமெயான
என் காதல்
உன்னை நேசிப்பதாக
சொன்ன
அந்த
ஒத்தை வார்த்தையோடு
தொலைந்து
போனவனாகிறேன்
நான்
நாற்பதை
தொட்டுவிட்டது வயசு
இன்னமும்
நிற்கிறது
செல் பட்ட
அந்த
பூ நாறும் மரம்
2.
எதிர்பாராத
சந்திப்புகளாக
வந்து போகின்றனர்
மனிதர்
நான்
அன்னிய தேசமொன்றின்
அகதியானேன்
யுத்தத்தால்
தொலைந்தே போனதுவும்
தொலைவதுமான
இந்த இருபது வருடங்களில்
எதிர்பாராமல்
எத்தனையோ நிகழ்கிறது
முன் வீட்டு
அழகான
உன் பள்ளித்தோழி
என் பக்கத்து
மாடிக்காரியானதுவும்
உன் அயல்
ஒழுங்கை என் நண்பன்
தென் துருவ
தேசமொன்றிருந்து
தொலை பேசியதும்
பேளின் வந்திறங்க
என் பால்ய பருவத்து
பள்ளித்தோழன்
கை பற்றிப்போனதுவும்
இப்படி எத்தனையோ
எதிர்பாராமல்
நிகழ்கிறது
ஏதாவதொரு நாட்டில்
ஏதாவதொரு தெருவில்
எதிர் பாராமல்
உன்னை
எதேச்சையாகவேனும்
சந்திக்க தவிக்கிறது
மனசு.
3.
இப்பவும் நினைவிலிருக்கிறது
உன் வீட்டு ஐன்னல்
நிறம் மங்கிப்போன
மதில் சுவர்
அதில் உள்ள வட்டம்
தொட்டுவிடும் கோடுகள்
இப்படி எல்லாமே
நினைவிலிருக்கிறது
சில வேளைகளில்
மட்டுமே தெரிந்து விடும்
உன் முகத்திற்காய்
காத்திருந்த காலங்களில்
என்னோடு கூடவிருந்தன
அவை.
நீயில்லா உன் வீட்டு
வாசல் வந்தேன்
யுத்தம்
சப்பித்துப்பிய எச்சமாய்
இருந்தது வீடு
நம்பிக்கை தரும்
உன்
விபரமெதுவும்
அதனிடமில்லை
தொட்டு தடவி
விட்டு வர
உன் நினைவுகளுடனே
அதுவும்
கூட வருகிறது
4.
இன்னமும்
இருக்கிறது மாறாத
உன் மீதான
என் காதல்
உனக்கும் என் போலவே
ஆகியிருக்கும்
வயசு
முகமெங்கும்
வளர்கிறது
நரைமுடி
தலை தடவி
கேட்கிறாள்
செல்ல மகள்
இதுவரையில் சொல்லாத
ஒழித்து வைத்த
ஏதும்
உண்டாவென
ஒருநாள் வரும்
உனைச் சொல்வேன!
உன் மீதான
என் காதலைச் சொல்வேன்!!
ஒரு முறையேனும்
கேளாதுன் குரல் பற்றியும்
உனக்கேயான
உன் காதலின்
பார்வை பற்றியும்
ஆணும் பெண்ணும்
சகசமாயில்லா
எம் கால
தேசம் பற்றியும்
இன்னமும் இருக்கும்
உன் மீதான
என் காதலை ச்
சொல்வேன்
(ஓவியமும் கவிதையும்: ஜீவன்)
Geevan
nandakandasamy@hotmail.com
- கவிதைகள்
- ஆட்டோகிராஃப் ‘காதல் சிறகை காற்றினில் விரித்து ‘
- இந்துத்துவம் ஏற்றம் பெற, அகண்டபாரதம் அரண்டு எழ சங்கியே சங்கூதிப் புறப்படு
- சேலை கட்டும் பெண்ணுக்கு…
- கனடா திரைப்பட விழாவில் செவ்வாய் கிரகம்
- Terminal (2004)
- நெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் – நூல் அறிமுகம்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 5
- புலம் பெயர் சூழலில் ஒரு புதிய வரவு ஊசிஇலை
- மனத்துக்கண் மாசிலனாதல் – ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ‘ நாஞ்சில் நாடன் கட்டுரை நூல் அறிமுகம்
- உடன்பிறப்பே
- கடிதம் ஜூன் 24, 2004
- கடிதம் -ஜூன் 24, 2004
- சொர்க்கம்
- கவிக்கட்டு 12 – கொஞ்சம் ஆசை
- காகித வீடு…
- இல்லம்…
- குழந்தை…
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- கலைஞன் நிரப்பும் வெளி : சுந்தர ராமசாமி புகைப்படக் கண்காட்சி :ஜூன் 25 முதல் 27 வரை
- கடிதம் ஜூன் 24, 2004
- கல்கியின் பார்த்திபன் கனவு இணையத்தில்
- நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : வெளியீட்டு விழா
- திரைகடலில் மின்சக்தி திரட்டும் உலகின் பலவித மாதிரி நிலையங்கள் [Various Types of World ‘s Ocean Power Stations]
- நல்லகாலம், ஒரே ஒரு சமாரியன்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 8)
- இரசியாவை மிரட்டும் கதிர்வீச்சு ஆபத்து-ஒரு இரசிய விஞ்ஞானியின் பேட்டி
- நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?
- வாரபலன் – ஏமாளித் தமிழ் எழுத்தாளா , கிளிண்டன் கொஞ்சிய கிளி , ரொபீந்திர சங்கீத் ஜார்கள், வாய்க்கால் கடக்காத ஜெயபாரதி
- தென்கிழக்கு ஆசியா: அச்சுறுத்தும் பெண்கள் குழந்தைகள் கடத்தல்
- பொன்னாச்சிம்மா
- பெண்கள்: நான் கணிக்கின்றேன்
- மஸ்னவி கதை — 10.1 : அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- பட்டமரம்
- தமிழ்நாட்டுக்குப் பொருத்தமான விகிதாச்சார தேர்தல் முறை – என் கருத்துக்கள்
- கோபம்
- ஆறுதலில்லா சுகம்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்
- ஏ.சிி. யில் இருக்கும் கரையான்கள்
- இப்பொழுதெல்லாம் ….
- அப்பாவின் காத்திருப்பு…!!!
- இறைவனின் காதுகள்
- கவிதை
- தமிழவன் கவிதைகள்-பதினொன்று
- அன்புடன் இதயம் – 22 – தமிழை மறப்பதோ தமிழா
- சூத்திரம்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-25