அனந்த்
வாழ்க்கை என்பது குன்றும்தான்
… வளைந்து நெளியும் பாதையும்தான்
ஆழ்ந்து பரந்த ஆழியும்தான்
… அச்சம் விளைக்கும் அடவியும்தான்
சூழும் தடையைத் தனித்தனியாய்ச்
…சுட்டிச் சொல்வார் வழிபிறர்;நாம்
தாழா தெதிலும் முன்னேறத்
…தன்னம் பிக்கை தான்துணையாம்
அறிவு மிகுந்து அமைந்தாலும்
..அனுபவ ஞானம் அடைந்தாலும்
செறிந்த நண்பர் சேர்ந்தாலும்
…தேயா துழைப்பைச் சொரிந்தாலும்
உறுதி நெஞ்சில் இருந்தாலும்
.. .உடையா இதயம் படைத்தாலும்
அறுதி யாய்த்தன் னம்பிக்கை
… ஆமே அவற்றிற்(கு) ஆதாரம்
அஞ்சனை புதல்வன் கதைகேட்டோம்
…அறிவில், அனுபவம் ஆற்றலிலே
நெஞ்சத்(து) உறுதி நட்பினிலே
… நிகரில் லாத மாருதிக்குக்
கொஞ்சமும் அவைதாம் பயனற்றுக்
…குலைந்து நின்ற போதினிலே
வஞ்சப் பகையை வெல்லஒரே
…வழிதன் னம்பிக் கைஉணர்ந்தான்!
உம்திறன் கொண்டிவ் வுலகையெலாம்
… ஊர்வலம் வருவீர் எனச்சொல்ல
எம்பிக் குதித்து மயில்மீதில்
… ஏறிப் பறந்தான் ஆறுமுகன்
தும்பிக் கையா னோதன்னுள்
… சுதியோ(டு) ஒலிக்கும் மந்திரமாம்
நம்பிக் கையின் துணைகொண்டு
… நடந்தான், அடைந்தான் நற்கனியை!
காந்தி, *கெல்லர், நெப்பொலியன்
…கவிஞர், அறிஞர் கலைஞர்பலர்
ஏந்தும் தீபம் தம்திறனில்,
… எடுத்த முடிவில், செயல்முறையில்
ஆழ்ந்த நம்பிக் கையன்றோ ?
…அதன்ஒளி குன்றின் அனைத்தும்இருள்!
வாழ்ந்து காட்டிய மாந்தர்இவர்
… வழியினும் சிறந்த(து) ஏதுமுண்டோ ?
இன்றைய பாட சாலைகளில்
… இருக்கும் மாணவர் முன்னேற
இன்றி யமையாச் சாதனமாய்
… இருப்பது அவர்தம் ஆற்றலிலே
குன்றாத் தன்னம் பிக்கையெனக்
…கூறுவர் அறிவுரைத் துறையோர்**;நாம்
நன்றாய் வளர்த்தால் நம்பிக்கை
…நாளைய வாழ்விற்(கு) அடிகோலும்.
‘நான் ‘எனும் உணர்வே நமதுசெயல்
… நடுவே இழையும் உயிர்அதனால்
தான்அதன் தரத்தினை மேல்உயர்த்தும்
… தன்னம் பிக்கை நம்வாழ்வை
மேன்மேல் உயர்த்தும் வெற்றிதரும்
… வெவ்வே றான குணநலன்கள்
தாமே நம்மை வந்தடையத்
… தன்னம் பிக்கை முதல்தேவை!
முடிக்கும் முன்னே நினைவுறுத்த
… முனைவேன்: தன்னம் பிக்கையுளோர்
துடிப்பாய்ச் செயலில் இறங்குவர்பின்
… தோல்வி வரினும் தளராமல்
அடுத்த வழியை ஆராய்ந்தே
… அமைப்பார் தம்வாழ்(வு) அனைத்திலுமோர்
பிடிப்பாய் விளங்கும் தன்மதிப்பைப்
… பிறருக் காகப் பலிதாரார்.
====
குறிப்பு:
*ஹெலென் கெல்லெர் என்னும் கண்ணிழந்தும்
நம்பிக்கை இழக்காத அரிய பெண்திலகம்
**மாணவர் அறிவுரைத் துறை: student counselling
service.
ananth@univmail.cis.mcmaster.ca
Prof. V.S. Ananthanarayanan
Biochemistry Department
McMaster University
Hamilton, ON L8n 3Z5
tel: 905-525-9140 x-22783
web: http://www.fhs.mcmaster.ca/biochem/Faculty.htm
- தன்னம்பிக்கை
- தெற்காசியத் திரைப்பட விழா – படங்களை அனுப்ப வேண்டுகோள்
- கடிதம் ஜூன் 17,2004
- ஆட்டோகிராஃப் ‘தலை சாய்ந்து போனால் என்ன செய்யலாம் ‘
- சேதி கேட்டோ..
- பஞ்சத்தின் உண்மை பேசும் புல்லர்களை பொசுக்கிட பொங்கி எழு தோழா, புறப்படு
- வெங்கட் சாமிநாதனுக்கு டொராண்டோ பல்கலைக்கழத்தின் இயல் விருது விழா
- என் பொழுதுகளில் இதுவும்..
- தமிழுக்குப் பெருமை
- நிழல் யுத்தம் பற்றி
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 4
- திரைகடல் நாடியும் தேடு மின்சக்தி! [Energy from The Ocean Waves, Tides & Thermal Power]
- பிறந்த மண்ணுக்கு.. – 6 (கடைசிப் பகுதி)
- விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும்
- அவர்கள்
- கவிதைகள்
- ஆயுட் காவலன்
- வீடு திரும்புதல்
- நிழல் பாரங்கள்
- நிகழ்வெளியின் காட்சிகள்
- உறங்கட்டும் காதல்
- கவிக்கட்டு – 11 : எங்கே மனிதம் ?
- கடலைக்கொல்லை
- அன்புடன் இதயம் – 21 – பிரிகின்றேன் கண்மணி
- மின்மினி பூச்சிகள்
- செல்பேசிகளைத் தெரிந்து கொள்வோம்!
- டயரி
- சித்திரவதை
- பாசமா ? பாசிசமா ?
- மலை (நாடகம்)
- தனக்கென்று வரும் போது..!
- மஸ்னவி கதை — 10 :அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- வெற்றுக் காகிதங்கள்
- தென்னையும் பனையும்
- சாயம்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 24
- அஞ்சலைப் பாட்டி
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)
- வாரபலன் – ஜூன் 17,2004 – டில்லிக்குப் போன கவுன்சிலரு , ஆயிரம் இதழ் கண்ட கலா கெளமுதி , வாத்துக்களின் வட்டார வழக்கு , அஞ்சலி : காச
- கவிதைகள்
- நம்பிக்கை
- குழந்தை மனது
- உடன் பிறப்பு…
- தமிழவன் கவிதைகள்-பத்து
- தீர்மானம்
- இல்லம்
- தூரம்
- அப்பாவுக்கு…!!!
- மிராண்டாவைப் பார்த்து மிரண்டவர்கள்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9
- நெய்தல் நிலத்துக்காாி!