பாஷா
காத்திருக்கிறேன்
உன் தங்கைகளுக்காகவும்
சொப்பனத்திற்கு பிந்திய பின்னிரவுகளில்
உன் உறவுகளை நினைத்து
என் நெஞ்சில்
நீ வடிக்கபோகும் கண்ணீருக்காகவும்
என் காதலை
என் நெஞ்சில் சமாதிவைத்து
மலர்கொத்தும் வைத்துவிட்டேன்!
ஒருவருக்கொருவர் உடன்வர முடியாத
திசைகளின் விளிம்பில்
ஒரு நாள் சந்தித்தோம்
நீ வந்த திசையின்
சாலையிலெல்லாம் நீ
தெளித்த கண்ணீர்.
ஒரு புன்னகையை மட்டும்
உன்னிடமிருந்து வாங்கி
உன்னை உன் திசை
அனுப்பிவிட்டு
கரையான்களாய் அரிக்கும்
உன் நினைவுகளுக்கு
வெற்று வெளியில்
சிதைமூட்டிகொண்டிருக்கிறேன்!
இருந்தாலும்….
உன் ஜானவாசத்தில்
என் ஜன்னலோரம் தாமதிக்கும்
உன் உறவு கூட்டம்
உன்பெயர்கொண்ட கடவுள்
வானொலியில் அடிக்கடி ஒலிக்கும்
உனக்கு பிடித்த பாடல்
நீ விரும்பி கேட்கும் அரிசிமுறுக்கு.
இவையாவும்
உன் நினைவுகளை
எரியும் சிதையிலிருந்து
எடுத்து போடுகிறது!
காதலை காற்றில்
கரைத்து வாழ்க்கை
அங்கிகரித்த அந்தஸ்த்தின்
பரிவட்டத்தை தரித்திருக்கிறாய்
இன்னும் நான்
உன் நினைவுகளுடன் மட்டுமே
போராடி தோல்வியுற்று
ஆயுளை அவசரமாய் கழிக்க
ஆண்டவனிடம் வரம்கேட்டு
நீ வரும் குளக்கரையில்
கல்லெறிந்து காத்திருக்கிறேன்!
—-
நிராகரிப்பு
மழைகழுவிய சாலையில்
நிலைகுலைந்த நிர்வாண பிச்சைக்காரியாக
ஏழைவீட்டில் மரபுசிறையிலிருக்கும்
இளம் விதவையாக
ஆயிரம்காலத்து பயறுக்காய்
ஆறாண்டுகளாக அரிதாரம்தரிக்கும்
கனவுசுமந்த பெண்ணின்
கனத்த மெளனாமாய்
நரைகொண்டு உடல்கூனி
தீர்ந்த இருமல் மருந்தை
தன்மகனிடம் சொல்ல
வார்த்தகள்கோர்த்து ஒத்திகைபார்க்கும்
கிழவனின் வறட்டு இருமலாய்
காற்றின் திசையாவும்
நிராகரிப்பு….
தரையோடு தரையாக தேயினும்
திரும்ப திரும்ப எழும் வீம்பாய்
விழுந்த இடத்திலேயே
வீழ்ந்துகிடக்கும் விரக்தியாய்
உரிமைகள் மறுக்கப்பட்டபோதும்
உயரத்தைமட்டும் பார்க்கும் பிடிவாதமாய்
ஒருதலை காதலில்
உயிர்துறக்கும் மடமையாய்
ஒன்றாய் தோன்றி
பலபரிமாணங்களெடுக்கும்
நிராகரிப்பு….
சுடலைமாடனாடும் செங்காட்டில்
சவக்குழியாவும் சொல்லும்
கதையிலெல்லாம் கருவாக இருக்கும்
நிராகரிப்பு….
—-
sikkandarbasha@hotmail.com
- இந்தியாவில் பூச்சிக்கொல்லிகள்
- கடிதம் ஜூன் 10, 2004
- கடிதங்கள் – ஜூன் 10,2004
- ஆட்டோகிராஃப் ‘மூத்தவள்(ன்) நீ கொடுத்தாய் ‘
- நியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா
- நியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி – 3
- வண்ணாத்திக்குளம்-குறுநாவல்-ஒரு வாசகாின் கண்டோட்டம்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)
- இசை கேட்டு…
- சமீபத்தில் வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா
- கடிதம் ஜூன் 10, 2004
- உலகத் தமிழ் குறும்பட/ஆவணப்பட விழா-கனடா டோரோண்டோவில்
- நஞ்சில் விளையும் பருத்தி
- பூச்சிக்கொல்லி பாதிப்புகள்
- வாழ்வைப் பறிக்கும் பூச்சிக்கொல்லிகள்
- மல மேல இருக்கும் சாத்தா.
- கவிதைகள்
- எலக்ட்ரான் எமன்
- வண்ணத்துப்பூச்சி விளையாட்டு….
- கடிதம் – ஜூன் 10,2004
- கடிதம் ஜூன் 10 ,2004
- கடிதம் ஜூன் 10,2004
- அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்
- புதிய உயிரினம் பிறப்பதை அறிவியலாளர்கள் கண்ணெதிரே பார்க்கிறார்கள்
- சென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்)
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 8
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)
- வாரபலன் – ஜூன் 10,2004 – தெருவில் மலரும் கலைகள் , மறந்துடுங்க வேறே கூட்டணி , வேட்டி போச்சு வேகம் வந்துச்சு
- மனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார்
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 23
- பெண் ஒன்று கண்டேன்
- பூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்
- போர்வை
- முகமிருக்கையில் முகமூடி எதற்கு ?
- சூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்
- கடிக்காமல் விடுவேனோ ?
- தாய்மை – ஒரு உளவியல் பரிசோதனை
- தேனீ – அடை கட்டுமானமும் தற்காப்பும்
- பாரதத்தில் முன்னேறி வரும் பூதக் காற்றாடி யந்திர மின்சக்தித் துறைகள் [Giant Wind Power Development in India]
- நிழல்
- பறத்தல் இதன் வலி
- கவிக்கட்டு 10 -கதையாகிப் போனவளே !
- நாத்திக குருக்கள்
- அம்மாவின் கடிதம்!
- தீந்தழல் தோழியொருத்தி…!!!
- தமிழவன் கவிதைகள்-ஒன்பது
- பிறந்த மண்ணுக்கு – 5