அச்சம்

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

அருண்பிரசாத்


சாரல்புகை படிந்த
குன்றின் மேல்
நீர் சொட்டும் கொடிகளின்
ஸ்பரிசங்கள்.

நெகிழ்ந்து கசிகிறது
மண்
ஊடுருவும் வேர்களுக்கு
மடியை விரித்தபடி.

மெலிதாய் அச்சம் தருபவை
பெருங்கற்கள்
என்றேனும்
சிற்பங்களாய் உறைந்துவிடலாம்.

—-
everminnal@yahoo.com

Series Navigation

author

அருண்பிரசாத்

அருண்பிரசாத்

Similar Posts