கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

ப.வேல், சிங்கப்பூர்


காதல்
நடப்பு ஆண்டு
நகரா ஆண்டாகிறது!
நாட்காட்டி
நங்கூரம் போடுகிறது!
கடிகாரம்
கடிவாளம்
போடுகிறது!
நிமிடங்கள்
நிலைக்குத்தி
நிற்கிறது!
நொடிகள்
நொடித்துப்போய்
நிற்கிறது!
தெரிந்தால் சொல்…
காதலுக்கு
காப்புறுதி எடுக்கும் வழி!
—-
காதல்
உன் பார்வைப்
பிச்சைக்காகத்தான்
அந்த வானம்
நிலாத் தட்டு
ஏந்துகிறது!
நீ…
அண்ணாந்து
பார்ப்பாய் என்றுதான்
அந்த நிலா
குப்புறக் கிடக்கிறது!
உன் ஒவ்வொரு
நடையிலும்
பூமி தன்னைத்
தன்னைத்
துடைத்துக் கொள்கிறது!
நீ குளிக்கும் போது
தண்ணீர்தான்
குளித்துக் கொள்கிறது!
பார்த்தாயா ?
நடப்பனவாய் பிறந்த
நான்..
உன்னால்
பறப்பனவாவதை!

Series Navigation

author

ப.வேல், சிங்கப்பூர்

ப.வேல், சிங்கப்பூர்

Similar Posts