கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

சாந்தி மனோகரன்


இறந்தவன் சொன்னது…!!!

புரியாத உண்மைகள்
பொதிந்துள்ளதோர்
புதிரான புத்தகமே வாழ்க்கை
உண்மைகள் சில நேரம்
புரியும்போது-இந்த
உலக வாழ்வே பொய்யென்பதுவும்
புரிந்துபோகும்..ஏனென்றால்
ஒன்றுமில்லாத ஒன்றைத்தவிர
வேறொன்றுமில்லாதா ஒன்றுதானே இந்த
ஒப்பற்ற வாழ்க்கை


இறப்பவன் சொன்னது..!!!

கண்களை திறக்க நினைக்கின்றேன்
முடியவில்லை
கைகளை அசைக்க நினைக்கின்றேன்
அசைவில்லை
உறக்கத்தில் விழித்துக்கொண்டது
உள்மனது…
இன்னும் எனக்கு புரியவில்லை
நான் இறந்து கொண்டிருப்பதை…!!


தாரை தப்பட்டைகளுடன்
வீர முழக்கமிட்டே…யார்மீதோ
சேறை வாரியிறைத்து
கொடியேற்றி
வாக்குறுதி தந்தார் தலைவர்…
எல்லாம் பறந்தது
வழக்கம்போல் காற்றில்


shanthi_yem@yahoo.com

Series Navigation

author

சாந்தி மனோகரன்

சாந்தி மனோகரன்

Similar Posts