இல்லம்…

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி சிங்கப்பூர்


இந்த உலகம்
இங்குதான் விடிகிறது.

எங்களின் உயிர்கள்
உயிர்ப்பதெல்லாம்
இங்குதான்.

மூழ்கி முத்தள்ளினாலும்
மூச்சு விடுவது
இங்குதான்.

கடலையே வளைத்தாலும்
இந்தக்
கரைக்கு வந்துதான்
வலைகளை இழுக்க வேண்டும்.

ஓடியாடிய உழைப்புக்கு
உடன் பெறும் ஊதியம் இங்குதான்.
அசதியிலேந்தும்
அன்பின் மடி இங்குதான்.

வெற்றியின் முதல் படி
இங்கிருந்துதான்.

தேடிப் பாடித் திரிந்தப் பறவை
திரும்பும் கூடு இதுதான்.

கட்டியாடும் ஊஞ்சல்
உட்கார வைக்கும் நாற்காலி
நடக்க வைக்கும் நடைவண்டி
கதவோரம்
காத்திருக்கும் அழைப்புமணி
இன்னும்
எல்லா உறவுகளோடு

நிம்மதியான நித்திரையிலிருந்து
நிசமாகவே எழுப்புகிற
எழுப்புமணி தீண்டல்
இங்கேதான்.

எங்கலைந்தாலும் எங்கும் கிடைக்காத
உறக்கம் மட்டுமல்ல…
எங்கோ இருக்கும் எதையும் எட்ட
எழுதலும் இங்குதான்.

இந்த உலகம்
இங்குதான் விடிகிறது.

ஒவ்வொருவருக்கும்
இந்த
உலகத்துக்குள் ஒரு உலகம்
இந்த இல்லம்.
(சிங்கப்பூரில் மாதாமாதம் நடக்கும் “கவிமாலை” நிகழ்வின் மேமாத கவிதைத்தலைப்பு “இல்லம்”)

பட்டுக்கோட்டை தமிழ்மதி
சிங்கப்பூர்.
thamilmathi@yahoo.com

Series Navigation

author

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி

Similar Posts