வாழ்க்கை

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

சாந்தி மனோகரன்


நடப்பதை நிறுத்திவிட்டு
நின்று பார்த்தபோது
பாதையின் முடிவில் நானிருந்தேன்….

நடந்து வந்த பாதையை
திரும்பிபார்த்தால்..அதுவும்
நான் கடந்து வந்த பின்னே
உடைந்தோ இல்லை கரைந்தோ
தொலைந்து போயிருந்தது…

விளிம்பினிற்கு வந்துவிட்டோமோ எனவெண்ணி
நடக்க தொடங்கியபோது
கால் விரல் காட்டிய திசையில்
பாதை தொடர்ந்துகொண்டே இருந்தது…
நானும் நடந்துகொண்டே இருக்கிறேன்
—-

shanthi_yem@yahoo.com

Series Navigation

author

சாந்தி மனோகரன்

சாந்தி மனோகரன்

Similar Posts