மனஹரன் – மலேசியா
சுவர்க்கம்
மனஹரன் – மலேசியா
நான் வீணைதான்
நீ
மீட்டிய பிறகு
தெரிந்து கொண்டேன்
உனக்கு
விரல்களே இல்லை
—-
மீண்ட சொர்க்கம்
மனஹரன் – மலேசியா
இன்னும் வெளிச்சங்கட்டும் வாலிபத்தை
வீட்டுக்குள் முடக்க வைப்பது
நியாயம்தானா ?
இன்னும்
பச்சை படரும் பருவதற்கு
பாசாணம் வார்ப்பது
முறைதானா ?
சொல்
வெள்ளையடிக்கும் முன்னே
வெளுத்துவிட்டதாய்
வாழ்க்கையை விரட்டுவது
சரிதானா ?
நம்மில்
பலரின் படுக்கையறைகள்
சாந்தி முகூர்த்தத்திற்குப் பின்
வாசம் வீசுவதில்லை
கரை கண்ட கட்டிலும்
அமுங்கி கிடக்கும் மெத்தையும்
மருத்துவமனையையல்லவா
ஞாபகத்திற்குக் கொண்டுவரும்
மங்கையர் பலர்
மாதவிடாய் நின்றதும்
தாம்பத்தியம் அற்றுப்போனதாய்
கருதி முடிக்கின்றனர்
பெண் பிள்ளை
பெரியவள் ஆனதும்
படுக்கையில்
அவளுக்குத் துணைச்செல்லும்
தாய் மார்களே
அவளுக்கு கூட்டல் என்றால்
உங்களுக்கு கழித்தலா ?
விடுபடும் சொந்தத்திற்காகச்
சொர்க்கத்தின் பாதைகளை
ஓரங்கட்டி வைப்பதா ?
முதல் முத்தம்போல்
முனகலெல்லாம்
தினம் தினம்
காதுக்குள்
ரீங்காரமிட வேண்டும்
ஒவ்வொரு காலையும்
வெட்கத்துடன்
விடிய வேண்டும்
ரெட்டை நரை கண்டவுடன்
பூஜையறை கதவுகளை
திறந்துவிட்டு
வாழ்க்கையை மூடி விடாதீர்கள்
படுக்கையறையும்
வாசம் வீசட்டும்
நாளொரு பூஜையும்
பொழுதொரு விரதமும் எடுப்பது
எந்தத் தாகத்தைத்
தீர்ப்பதற்காக ?
தினம்
முத்தமிழைப்போல்
முப்பாலைப்போல்
மும்முறையாவது முத்தமிடுங்கள்
சொற்கள் முடமாகி
அதரங்கள் உரசட்டும்
வாழ்க்கையின் விரசம்
உயிர் பெறும்
இறுக்கம் பெருகும்
இடைவெளி
விவாகரத்துப் பெற்று ஓடும்
வயதாகிவிட்டதென்று
நினைத்துக் கொண்டிருக்கும்
மனைவி மார்களே
மார்க்கச்சை அளவுகளைக்
குறைத்துக்கொள்ளுங்கள்
வயது குறைந்து நிற்கும்
படுக்கையறையில்
போர்வை இரண்டுபட்டால்
இறுக்கம் விலகி நிற்கும்
பிரிவு பிரிவு கேட்கும்
வயதாகிவிட்டதென
முடிவு செய்து விட்டவர்களே
திருமண விழாவிற்கு
இருவரும் செல்லுங்கள்
சாவுக்குப்போவதை
நிறுத்துங்கள்
அந்த வருத்தமே
பாதி வாழ்க்கையை
மென்றுவிடும்
வயதாகிவிட்டால் என்ன ?
கைகோத்து நடங்கள்
உள்ளங்கை ஸ்பரிசம்
உள்ளத்தில்
மீண்டும் பரிசம் போடும்
இருவரும்
ஒன்றாக உணவருந்துங்கள்
இருவரும்
ஒன்றாக படுக்க செல்லுங்கள்
இடைவெளி குறைந்து
உயிர் பிரியும்
வாழ்க்கை வாழ்வதற்கே
அதில்
குறைப்பதற்கும் முடக்குவதற்கும்
நாம் யார் ?
—-
kabirani@tm.net
- வலிமிகாதது
- அடுத்த பிரதமராக கலைஞர் கருணாநிதி வரவேண்டும்
- வாரபலன் – மே 13, 2004 – ஈராக் இந்தியசோகம் ,எமெர்ஜென்சி முன்னோட்டு, இந்திய வரைபடம் சீனாவின் கபடம்
- கடிதம் மே 13,2004 – ஜோதிர்லதா கிரிஜாவுக்கு: வருத்தமும் விளக்கமும்
- கடிதம் மே 13,2004 – ரஜினி, டி ஆர் பாலு
- கம்பராமாயணம் குறுந்தகட்டில்
- ராமாயணம் – நாட்டிய நாடகம் – இந்தியா இந்தோனேசியா குழுக்கள்
- கடிதங்கள் – மே 13, 2004
- சொல்லவா கதை சொல்லவா…
- ஞானப்பல்லக்கு
- புதிய வடிவத்தை¢ தேடி (தழும்பு – கன்னடச் சிறுகதைத் தொகுதியின் அறிமுகம்)
- கந்தர்வனும் கடைசிக் கவிதையும்
- வேடம்
- விதி
- எங்களை அறுத்து
- இரு கவிதைகள்
- வடு
- திடார் தலைவன்
- விபத்து
- வெள்ளத்தில்…
- அரவணைப்பு
- உள்ளும் புறமும் எழிற் கொள்ளை
- கடவுளின் மூச்சு எப்படிப்பட்டது
- அன்புடன் இதயம் – 17. கல்யாணமாம் கல்யாணம்
- இந்தியா ஒளிரக்கூடும்…
- சமீபத்தில் படித்தவை 2- இளங்கோவன், அசதா, எம் வேதசகாயகுமார், இடாலோ கால்வினோ(தமிழாக்கம் பிரம்மராஜன்), சந்திரன், மணா, உமா மகேஸ்வரி,
- சில குறிப்புகள்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 5
- சன்மார்க்கம் – துன்மார்க்கம்
- கூட்டணிகளா, இன்றேல் வேட்டணிகளா ?
- உலக வங்கி அறிக்கை : ஆப்பிரிக்க ஏழ்மை 82 சதவீதம் அதிகரிக்கும்
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 1
- உள் முகம்
- கட்டுகள்
- ‘சுடச்சுட ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு விட்டு சின்னதாய் ஒரு நித்திரை கொள்ள வேணும்… ‘
- பிறந்த மண்ணுக்கு – 2
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 19
- ஆக்கலும் அழித்தலும்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)
- இந்தியத் தேர்தல் 2004 – ஒரு பார்வை
- மலைகளைக் குடைந்து தோண்டிய ஜப்பானின் நீண்ட செய்கன் கடலடிக் குகை [Japan ‘s Seikan Subsea Mountain Tunnel (1988)]
- தேனீ – சாதீய கட்டமைப்பு
- மனித உடலில் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்
- தமிழவன் கவிதைகள்-ஐந்து
- சொல்லின் செல்வன்
- கவிக்கட்டு 6 – நதியின் ஓரங்களில்
- .. மழை ..
- உன்னில் உறைந்து போனேன்…
- புத்தரும் சில கேள்விகளும்
- சலிப்பு
- நீ எனை தொழும் கணங்கள்….!
- காதல் தீவு