கவிதை

0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

பாஷா


உன்னிடம் தன்னைசொல்ல
தன் எழுத்தாணிக்கொண்டு
தன்னையெழுதிக்கொண்டே போகிறது
என் கவிதை!

தொடங்கப்படும் கவிதையெல்லாம்
தோழியுன் விமரிசன வரிகளால்மட்டுமே
முடிவடைகிறது
முடிவடையாமல் முடமான கவிதைகள்
ஏராளமுண்டு என்னிடம்!

முன்பெல்லாம் உன்னைசொல்ல
ஓராயிரம் பக்கங்களாய் விரிந்த என்கவிதை
உன் பெயரளவில் இன்று
சுருங்கிவிட்டது!

எழுதுபவளாய் எழுதப்படுபவளாய்
எல்லாமாய் என்னில்
நீ நிறைந்துவிட்டாய்!
—-
sikkandarbasha@rediffmail.com

Series Navigation

author

பாஷா

பாஷா

Similar Posts