கி. சீராளன்.
ஒரு கவிஞனின் அகராதி
—
‘ ‘கவிதை ‘ ‘ என்பது காதல் வந்ததும்
தடுமாறும் வாக்கிய கோர்ப்பு
‘ ‘காதல் ‘ ‘ என்பது
கவிதை எனும் உளறலை
தூண்டிவிடும் மதுக்கஷாயம்.
‘ ‘நிலா ‘ ‘ எனப்படுவது
எல்லா கவிஞர்களுக்குமான
ஒரே காதலி;
எல்லா காதலிகளுக்குமான
ஒரே உதாரணம்;
எல்லா காதலிகளைப் போலவும்
மாதத்தில் ஒரேநாள்
சிரிக்கவைக்கும் பெளர்ணமி.
‘ ‘அழகு ‘ ‘ – காதல் குடிகொண்டபின்
எல்லாப் பெண்ணும், பொருளும்
காட்டும் பொலிவு.
‘ ‘முத்தம் ‘ ‘ – நிறைய நெருப்பை
உள்ளடக்கி
உரசிப் பார்க்கும் தீக்குச்சி.
‘ ‘ஊடல் ‘ ‘ – ஒருநாள் சந்தோஷ விளைச்சலுக்காய்
வருடமெல்லாம் காய்ந்து கிடக்கும்
வறட்சி.
‘ ‘காமம் ‘ ‘ – கரையேறியதும்
காணாமல் போகும் கானல் நீர்.
‘ ‘பயம் ‘ ‘ – எல்லாமும் முடிந்தபின்
தேவையின்றி உதிப்பது.
‘ ‘ஏமாற்றம் ‘ ‘ – எல்லாமும் முடிந்தபின்
மிஞ்சியிருப்பது.
‘ ‘கடற்கரை ‘ ‘ – ஜனசமுத்திரத்தின் நடுவே
தனிமையை அடையாளம் காட்டும்
மாயக் கம்பளம்.
‘ ‘தனிமை ‘ ‘ – என்பதொரு மாயை.
‘ ‘காத்திருப்பு ‘ ‘ – ஏமாற்றத்தை
உறுதி செய்துகொள்வதற்கான
கால அவகாசம்.
‘ ‘கண்கள் ‘ ‘ – செய்தி ஒளிபரப்பு
சாதனம்;
விட்டில்கள் வந்து மோதி
உயிரை மாய்க்கும் விளக்கு;
சிரித்தால் பல பாலைவனங்கள்
பூத்துக்குலுங்கும்;
நீர் சுரந்தால்
பல சாம்ராஜ்யங்கள்
மாண்டு போகும்.
‘ ‘சிரிப்பு ‘ ‘ – சின்னச்சின்ன
இடைவேளைகள்,
மூச்சுவாங்க.
‘ ‘அன்பு ‘ ‘ – மனிதக் கால்களில்
நங்கூரம்.
‘ ‘பூக்கள் ‘ ‘ – தனியே இருந்தால்
சுகந்தம்
தலையேறினால் விண்மீன்கள்.
‘ ‘திருமணம் ‘ ‘ – வாழ்வின்
மின்சாரம் பறிக்கப்படுவதற்கான
முகூர்த்தம்.
‘ ‘வாழ்க்கை ‘ ‘ – நிலக்கரி தீர்ந்துபோன
நெய்வேலி.
‘ ‘கனவு ‘ ‘ – திருமணமானவனுக்கு
மலரும் நினைவுகள்
காதலனுக்கு தடுமாறும் நினைவுகள்.
‘ ‘தபால்காரன் ‘ ‘ – மின்னஞ்சலில்
காணாமல் போன,
போன நூற்றாண்டின்
காதல் தூதன்.
‘ ‘மரணம் ‘ ‘ – எல்லா சாகசங்களையும்
தவிடுபொடியாக்கி
மனிதனை வெல்லும் நிஜம்.
எல்லா நிஜங்களையும்
பொய்யாக்கும் சூனியக்காரன்.
‘ ‘அகராதி ‘ ‘ – வார்த்தைகளுக்கு
பொருள் சொல்லி,
வாழ்க்கையை தொலைக்கும்.
‘ ‘நான் ‘ ‘ – நீ, நீங்கள், அவர்கள்,
இவர்கள், அது, இது, அவைகள்,
எல்லாற்றுக்கும் எதிரி.
….
(2)
.. சுவர்கள் – சித்திரமின்றி ..
பெரியப்பா வீடுமட்டும்
இன்னும் மாறவில்லை,
அவர் விட்டுச்சென்ற
தலைவர்களின் படங்கள்
சுவரெங்கும்,
அவர்களின் பெயரை
பிள்ளைகளுக்கும் இட்டிருந்தார்.
நீதிக்கதைகள்
நிறைய சொல்லுவார்,
லட்சியப் பாத்திரங்கள்
உதாரணம் காட்டுவார்,
வாழ்க்கைநெறி ஒன்றை
வாழ்ந்து காட்டினார்.
என்பிள்ளை தன்பெயருக்கு
காரணம் கேட்டால்
என்னசொல்வேன்!
வாழ்ந்தவர் யாரைச்சொல்லி
திசை காட்டுவேன்!
வாழ்ந்து காட்டும்
பாத்திரங்கள் தான் உண்டா
படைப்புகளில், திரைகளில்!
என் சுவரெல்லாம் வெறுமை.
—-
punnagaithozhan@yahoo.com
- வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி
- முகத்தைத் தேடி
- கவிதை
- கடல் தினவுகள்
- இரவின் மடியில் ஆனந்தமாய் உறங்க…
- மத மாற்றமா ? மத ஒழிப்பா ?
- இணையத்தில் தமிழ் நூல்கள்
- கலாசாதனாலயா – சென்னை நடனக் குழு
- எழுத்தாளர் கந்தர்வன் மறைவு
- கடிதம் – 29 ஏப்ரல்,2004
- கேள்வியின் நாயகனே!
- சிவவாக்கியர் திருவாக்கியங்கள்
- கவிதை உருவான கதை – 4
- நாய்க்கும் நீரிழிவு வரும்
- இரண்டு கவிதைகள்
- இன்னும் விடியாமல்
- போய்வருகிறேன்.
- உடல் தீர்ந்து போன உலகு
- நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன
- விழிமீறல்
- வரவுயில்லாத செலவு
- கவிதை
- நட்பாராய்தல்
- கதவுகளும் சுவர்களும்
- விடியல்
- வினாக்கள் வியப்புகளாகட்டும்
- தமிழவன் கவிதை-3
- உள்ள இணையாளே
- உடலால் கட்டிய வாழ்வு
- தமிழ்வலை சுற்றி…. 1 (நா கண்ணன், உதயா, அருணா ஸ்ரீநிவாஸன்)
- முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன் காலமானார்
- அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 3
- திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்….
- இந்தியா பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் பொய்களை நீக்க வேண்டும்
- வாரபலன் – ஏப்ரல் 29,2004 – தூக்கங்கெடுக்கும் தூக்கம் , ஸ்விஸ் நாடகக்காரர்கள் , மலையாள ஹரிதகம்
- ரஜினி – ‘ தமிழ் நாட்டின் குழப்பவாதி ‘
- ஜோனதன் கிர்ஷ் எழுதிய ‘தெய்வங்களுக்கு எதிரான தெய்வம் ‘
- நாராயண குரு எனும் இயக்கம் -1
- சூன்யம்
- கதை 6 : வஹீ வந்தவரும் வஹீ எழுதியவரும்
- கரடி ரூம்
- தவிப்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-17
- ஆறுவது சினம்
- பிசாசின் தன் வரலாறு – 3
- விருதுகள், பரிசுகள் – சில கேள்விகளும், குறிப்புகளும்
- பாவண்ணனின் இரண்டு நுால்கள்
- சமீபத்தில் படித்த நூல்கள் 1- ராஜ் கெளதமன் , எல்லீ வீசல் , கவிஞர்கள், ரோஜர் வாடிம்
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் 2
- பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய பொறியியல் மகத்துவமான ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower in Paris (1887-1889)]
- இன்னொரு தினம்:
- கவிதைகள்
- அன்புடன் இதயம்- 15
- ஞாபக மழை
- ஏமாற்றுக்காரி
- இயக்கம்
- தாலாட்டு
- கடைசியாய்….
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21)