ஸ்ரீராம்
யாரும் இல்லாத ரயில் வண்டியும்,யாரும் இல்லாத ரயில் நிலையமும்
—-
அழகிய வேலைப் பாடுள்ள
ஆளுயர கண்ணாடி சீசாவை
ஒற்றை கயிறு பாலத்தில்
தூக்கிக் கொண்டு நடந்து
பத்திரமாக சேர்த்த நேரத்தில்
ரயில் வண்டி நினைவிற்கு வருகிறது..!
தேடி தேடி பெற்றவற்றை
இந்த ஊரிலேயே இறக்கி வைத்து..
தேடலின் உச்சத்தில்
காத்திருப்பதை காதலிக்க
தயாராகிறேன்..!
ரயில் நிலையத்திற்கு எவரையும்
வழியனுப்ப வர வேண்டாம்
என்று சொன்ன பிறகு
ரயில் நிலையத்தில் இப்போது..!
இருள் கவிழ்ந்த
கரிய இருளில் காத்து இருக்கிறேன்!
பயணத்திற்கு எதுவும் எடுத்து செல்லாமல்
அன்பையும் கருணையையும் ஏந்தி
என்னை ராஜனாக அழைத்து செல்ல
யாரும் இல்லாத ரயில் வண்டி
யாரும் இல்லாத ரயில் நிலையம்
வந்து சேரும்…
அவன் அழகன்!
—-
நான் சென்றபின்னர்தான்
அவன்
வந்து அமர்ந்து கொள்கிறான்!
நான் இருக்கும்வரை அவன்
வரப்போவதில்லை….!
நான் போக ஆரம்பித்தேன்…!
புள்ளியாய் போகும் அளவு…!
புள்ளியும் மறைந்து கரைந்து
போகும் மட்டும்…!
அங்கு
பேசாத வேர்களும்
பேசுகிற செடியில்
அமைதி பூக்களும்!
பால் பருகும் தன் கன்றை
நாவால் வருடும் தாய் பசு..!
பெரிய பெரிய
இறுகிய மலைகளின் மேலே
லேசான சுதந்திர மேகங்கள்!
வன்மையாய் மிதித்தும்
மென்மையாய் முத்தம் இடும் புற்கள்…!
பூவோடு பூவாக
அமைதியாய் அமர்ந்த போது
அவன்தான் வந்திருக்கிறான்…
அழகனாய்.
sriram_nagas@yahoo.com
- விட்டில் என்றொரு பொய்
- கடல் புறாக்களும், பொன்னியின் செல்வனும்
- கவிதை உருவான கதை-3
- ஒரு நாவல் -இரண்டு வாசிப்பனுபவங்கள்
- புத்தகங்கள் – என் எஸ் நடேசன், பா அ ஜெயகரன் , செழியன்
- அங்கே இப்ப என்ன நேரம் ?
- அணிந்துரைகள்
- ஹலீம்
- ரேடியோ இயற்பியல் முன்னோடி போஸ்
- மைக்ரோசாஃப்ட் செய்திகள்
- ஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய் [The Suez Canal (1854-1869)]
- தொழில்நுட்பச் செய்திகள்
- கடிதங்கள் – ஏப்ரல் 22,2004
- கடிதம் ஏப்ரல் 22,2004
- ….<> உள்ளத்திற்கோர் தாலாட்டு <>….
- அறைகூவல்!
- உன் நினைவுகள்
- இறுதி சில நொடிகளில்
- பழுதாகிச் சுழலும் கடிகாரங்கள்
- எல்லை!
- சத்தியின் கவிக்கட்டு 4
- இரு கவிதைகள்
- நீயும்…
- வெள்ளையடித்த கல்லறைகள்….
- இழப்பு
- அப்பா இல்லாமல் பிறந்த எலிகள்
- அவரே சொல்லி விட்டார்
- யாருக்காவது ஓட்டு போட்டுதான் ஆக வேண்டுமா ?
- துக்ளக் ‘சோ ‘வின் தொலை நோக்கு!
- வாரபலன்- ஏப்ரல் 22,2004 – மூட்டை மூட்டையாய் பூச்சி, பத்திரிகை மோதல், பிரகாச விபத்து, மருந்து மகிமை , ‘அடியடி ‘க்கலாம் வாங்க
- பெண்கள் சொத்துரிமை
- கதை 05-எஜமானும் அடிமையும்
- வெள்ளைக் குதிரை
- ரம்…ரம்மி…ரம்யா
- வாழ முற்ப்படுதல்….
- வசந்தம் காணா வாலிபங்கள்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- “கொட்டகைகளை மூடுவோம் !: மூடி விட்டுப் போங்களேன் !
- ரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்
- எழில் எது ?
- அன்று புர்ியாதது இன்று பு ாிந்தது.
- தமிழவன் கவிதைகள்-இரண்டு
- தாயே
- தமிழுக்கு அவனென்றும் பேர்…
- காடுகளால் ஆன இனம்
- பிசாசின் தன் வரலாறு-2
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 2
- துக்ளக் ‘சோ ‘வின் கனவு!
- நம் தடுமாறும் ஜனநாயகம்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்- 16