புதுவை ஞானம்
****
இன்றைய காலகட்டத்தில்
சில புத்தகங்கள்
மன்னிக்கப்படக் கூடியவை தான்.
ஓவியச் சீலையில் கருமையும்
வெள்ளித் திரையில் மெளனமும்
வெள்ளைக் காகிதத்தில் வெறுமையும்
சாத்தியமானவை தான்.
சமூக யதார்த்தத்துக்கும், உண்மைக்கும்
சிறியதொரு ஒட்டுதல் இருக்கிறது.
உண்மையெனவும், யதார்த்தமெனவும்
அழகானவை என்றும் கூட
பொய்யான சம்பவங்களைக் காண
பழக்கப்பட்டிருக்கிறோம் — நாம்
பொய்யான உள்ளுணர்வால்.
உள்ளதில் அன்றி
இல்லாததில் உறைகிறது உண்மை – இம்
மனிதர்களின் சமூகத்தில்.
அசிங்கமாக இருக்கிறது நம்
சமூக யதார்த்தம் – துரத்தப்பட்ட
உண்மையின் வெளிச்சத்தில்
பார்க்கும்போது.
அழகு என்பது தென்படுவதே இல்லை
பொய்யாக இருந்தாலன்றி.
ஏற்கனவே….
மறையத் தொடங்கி விட்ட நிகழ்வைத் தான்
காணத் தொடங்குகிறோம் நாம் -விரைவாக
மாற்றங்கள் நிகழுமொரு
சரித்திர காலகட்டத்தில்.
கடந்த காலத்தின் பின்புலத்தில்
நிகழ் காலத்தைத் தரிசிக்க
சிரமமாய் இருக்கிறது
நவீன மனிதனுக்கு.
முழுமையாய் வலுவிழந்து
மெல்லத் துடிக்கும்
கலாச்சாரத்தில்
அரை குறையாய் வாழும்
வெள்ளை மனிதனுக்கு – குறிப்பாக
வட அமெரிக்கனுக்கு
புதுப்பிக்கும் உணர்வு இல்லை
இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டதாகவே
கருதுகிறான் அவன்.
சில நேரங்களில்….
நம்மைச் சுற்றியும்
நமக்குள்ளும் நிகழும்
சிதைவுகளைப் பிரதிபலிப்பதன்றி
வேறெதுவும்
செய்யத் தோன்றவில்லை.
விரக்தியையும்
தோல்விகளையும் பற்றிய
கசப்பான பாடல்களைத் தான்
பாட வேண்டியதாய் இருக்கிறது.
(—HERBERT MARCUSE–ONE DIMENSIONAL MAN – உத்வேகத்தில்)
****
- மன்னித்து விடலாம்….
- பச்சை தீபங்கள்
- அகிலன் லெட்சுமணன் கவிதைகள்
- நா.இரா.குழலினி அவர்களுக்கு என் சிறு பதில்
- பாசிச பூதமும் குட்டித்தேவதையும்
- வாழிய உலக நல நற்பணி மன்றம், ஞானவானி விருது,
- ஜெயமோகனும் தாக்குதல்களும்
- சில குறிப்புகள் ஏப்ரல் 8, 2004
- கடிதங்கள் ஏப்ரல் 8, 2004
- ஆட்டோGraph
- சுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.
- கண்கொத்திச் சாமி.
- கடவுள்கள் விற்பனைக்கு
- எழிற்கொள்ளை..
- நற்பேறு பெற்றவன் நான்..
- உயிர் தொலைத்தல்
- தெய்வ தசகம்
- முடிவிலடங்கும் தொடக்கம்
- மேலான படைப்பு
- பரிட்சயம்
- அந்த வீடு
- கட்சி
- சத்தியின் கவிக்கட்டு 2
- தெருவும் பாடசாலையாக
- கவிதை உருவான கதை -1
- From Drunken Monkey to Lord Ganesha! ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘
- மைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு
- மறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 19
- ஒரு மழை இரவில்… (O ‘Henryயின் ‘After Twenty Years ‘ கதையின் தமிழாக்கம்)
- புழுத் துளைகள்(குறுநாவல்) – 3
- பிறழ்வுகள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 14
- மாய மான்
- அஃது
- அவன் அப்பிடித்தான்..
- கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்
- கட்சிகள் குறையும் நிச்சயமாய்! (இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது)
- வாரபலன் ஏப்ரல் 8, 2004 (சின்னு கிருஷ்ணா மற்றும் இதர கர்நாடக சங்கீதங்கள், கிராமக்கதைகள், மலையாள மாந்திரீகம்)
- உலகிலே பிரமிக்கத் தக்க மிகப் பெரும் ஜப்பானின் ஊஞ்சல் பாலம் (1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]
- கி. சீராளன் கவிதைகள்
- ஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி
- முதிர்கன்னி.
- கர்ப்பனை உலா
- மழைகழுவிய இலையில்
- ஏழாவது சுவைக்கவிதைகள்
- யார் நிரந்தரம் ?
- Chennai – Revisited
- புது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்
- ஞான குரு – கதை — 03