கவியோகி வேதம்
எழிலெல்லாம் மனத்துக்(கு)எக் கணமும்கொள் ளையாமோ ?
சுழித்தோடும் ஆற்றினையே சுகமில்லாக் கண்பார்த்தால்
.
பரவசம் விளைத்திடுமோ ? பலகவிச்சொல் முளைத்திடுமோ ?
இறைபக்தி இல்லையெனில் ‘கருவறைதான் ‘ இனித்திடுமோ ?
..
நம்முன்னே எழிற்கொள்ளை நாற்றைப்போல் அசைகிறது!
இம்மென்னு முன்,இந்த ஆச்சர்யப் பிரபஞ்சத்தில்
..
கோளங்கள்,சந்திரன்கள்,கோலோச்சும் ‘தூசிவெள்ளம் ‘,
தாள லயம்தனிலே ‘ஓம் ‘என்ற ஓசைக்குள்
..
கண்ணுக்கும் புரியாமல்,கருத்துக்கும் எட்டாமல்,
விண்ணுக்குள் சுழன்றென்றும் வித்தைகள் காட்டிநிற்கும்;
..
எத்தனையோ சிற்பிகள் கல்லில்-எழிற் கொள்ளையிட்டார்;
எத்தனையோ பாவலர்கள் மனம்-இளக்கும் இசைஅமைத்தார்;
..
அத்தனை கொள்ளை!தினம் அனைவரும் நினைக்கிறமா ?
சத்துநீக்கி அரிசிதனைச் சாப்பிடுங்கால் மனம்தனிலே
..
சேற்றினிலே உழவனின்கால் லய ‘க்கொள்ளை சிறைப்படுதா ?
சோற்றுப் பருக்கை,அவன் சுகவேர்வை தரும்கொள்ளை!
..
காலவண்டு ரீங்கரித்து,கணம்நம்மை ஓடவைத்துக்
கோலத்தை, நம்சதையை,க் கூசாமல் மாற்றிவிட்டு,
..
கிழக்கோலக் கொள்ளையிலே பொக்கைவாய் அழகுதந்தே
இழைக்கின்ற ‘பரிகாரம் ‘ இழையவிடும் பேத்திசுகம்!
..
அப் ‘பேர ‘ சுகம்தானே அவ்வயதின் ஆதாரம் ?
இப்போதும் அனுபவித்தே இக்கவிதை இழைக்கின்றேன்!
.
என்நண்பன் ‘கிச்சா ‘வும் ‘சுகக்கொள்ளை இது-என்பான்!
ஒன்பதைந்து வருடம்-அவன் அயல்நாட்டில் பணம்சேர்த்தான்!
..
டாலர்கள் சேர்த்தென்ன லாபம்பெற் றேன் ?என்பான்!
பாலகனை,அரவணைத்த பாசக் கிழவியினை,
..
பாவியேன் யான்-அங்கே பறிகொடுத்து விட்டுவந்தேன்;
ஆவிதான் போயினபின் அமெரிக்கா அழகாடா ?
..
அத்தனை எழில்தோட்டம்,அழகுமிகு மாளிகைகள்,
சொத்தெல்லாம் எனக்கொன்றும் சுகக்கொள்ளை தரலையடா!
..
அநாதையாய் நின்றேன்யான்!ஆச்சர்யம்! ஓரிரவில்,
கனாவில் வந்தார் ‘காஞ்சிமா முனிவர் ‘சொன்னார்;
..
உன்னைப்போல் அநாதையாய் ஒருகோடிக் குழந்தையிங்கே!
தென்னாட்டில் ‘பாலரில்லம் ‘ தேர்ந்தெடுத்து நடத்து!என்றார்; ‘ ‘—
.
பால வாக்கத்தில்(என்வீட்டருகில்)அநாதைப் பாலர்களைச்
சீலமுற வளர்த்து,அவன் சீராட்டி மகிழ்கின்றான்!
..
‘சொத்தெல்லாம் குழந்தைகட்கு!சுகக்கொள்ளை எனக்கெ ‘ன்பான்!
பெத்துப் போடாத பேரன்கள்என் தெய்வம் ‘என்பான்!
..
சொல்லுங்கள் கவிநண் ‘பீர் ‘! சுகக்கொள்ளை வெளியிலா ?
கல்லுக்குள் ‘தேரை ‘வந்தால், சுகம் எதற்கு ?கல்லுக்கா ?
****(கவியோகி வேதம்)
kaviyogi_vedham@yahoo.com
- மன்னித்து விடலாம்….
- பச்சை தீபங்கள்
- அகிலன் லெட்சுமணன் கவிதைகள்
- நா.இரா.குழலினி அவர்களுக்கு என் சிறு பதில்
- பாசிச பூதமும் குட்டித்தேவதையும்
- வாழிய உலக நல நற்பணி மன்றம், ஞானவானி விருது,
- ஜெயமோகனும் தாக்குதல்களும்
- சில குறிப்புகள் ஏப்ரல் 8, 2004
- கடிதங்கள் ஏப்ரல் 8, 2004
- ஆட்டோGraph
- சுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.
- கண்கொத்திச் சாமி.
- கடவுள்கள் விற்பனைக்கு
- எழிற்கொள்ளை..
- நற்பேறு பெற்றவன் நான்..
- உயிர் தொலைத்தல்
- தெய்வ தசகம்
- முடிவிலடங்கும் தொடக்கம்
- மேலான படைப்பு
- பரிட்சயம்
- அந்த வீடு
- கட்சி
- சத்தியின் கவிக்கட்டு 2
- தெருவும் பாடசாலையாக
- கவிதை உருவான கதை -1
- From Drunken Monkey to Lord Ganesha! ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘
- மைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு
- மறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 19
- ஒரு மழை இரவில்… (O ‘Henryயின் ‘After Twenty Years ‘ கதையின் தமிழாக்கம்)
- புழுத் துளைகள்(குறுநாவல்) – 3
- பிறழ்வுகள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 14
- மாய மான்
- அஃது
- அவன் அப்பிடித்தான்..
- கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்
- கட்சிகள் குறையும் நிச்சயமாய்! (இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது)
- வாரபலன் ஏப்ரல் 8, 2004 (சின்னு கிருஷ்ணா மற்றும் இதர கர்நாடக சங்கீதங்கள், கிராமக்கதைகள், மலையாள மாந்திரீகம்)
- உலகிலே பிரமிக்கத் தக்க மிகப் பெரும் ஜப்பானின் ஊஞ்சல் பாலம் (1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]
- கி. சீராளன் கவிதைகள்
- ஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி
- முதிர்கன்னி.
- கர்ப்பனை உலா
- மழைகழுவிய இலையில்
- ஏழாவது சுவைக்கவிதைகள்
- யார் நிரந்தரம் ?
- Chennai – Revisited
- புது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்
- ஞான குரு – கதை — 03