எழிற்கொள்ளை..

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

கவியோகி வேதம்


எழிலெல்லாம் மனத்துக்(கு)எக் கணமும்கொள் ளையாமோ ?

சுழித்தோடும் ஆற்றினையே சுகமில்லாக் கண்பார்த்தால்

.

பரவசம் விளைத்திடுமோ ? பலகவிச்சொல் முளைத்திடுமோ ?

இறைபக்தி இல்லையெனில் ‘கருவறைதான் ‘ இனித்திடுமோ ?

..

நம்முன்னே எழிற்கொள்ளை நாற்றைப்போல் அசைகிறது!

இம்மென்னு முன்,இந்த ஆச்சர்யப் பிரபஞ்சத்தில்

..

கோளங்கள்,சந்திரன்கள்,கோலோச்சும் ‘தூசிவெள்ளம் ‘,

தாள லயம்தனிலே ‘ஓம் ‘என்ற ஓசைக்குள்

..

கண்ணுக்கும் புரியாமல்,கருத்துக்கும் எட்டாமல்,

விண்ணுக்குள் சுழன்றென்றும் வித்தைகள் காட்டிநிற்கும்;

..

எத்தனையோ சிற்பிகள் கல்லில்-எழிற் கொள்ளையிட்டார்;

எத்தனையோ பாவலர்கள் மனம்-இளக்கும் இசைஅமைத்தார்;

..

அத்தனை கொள்ளை!தினம் அனைவரும் நினைக்கிறமா ?

சத்துநீக்கி அரிசிதனைச் சாப்பிடுங்கால் மனம்தனிலே

..

சேற்றினிலே உழவனின்கால் லய ‘க்கொள்ளை சிறைப்படுதா ?

சோற்றுப் பருக்கை,அவன் சுகவேர்வை தரும்கொள்ளை!

..

காலவண்டு ரீங்கரித்து,கணம்நம்மை ஓடவைத்துக்

கோலத்தை, நம்சதையை,க் கூசாமல் மாற்றிவிட்டு,

..

கிழக்கோலக் கொள்ளையிலே பொக்கைவாய் அழகுதந்தே

இழைக்கின்ற ‘பரிகாரம் ‘ இழையவிடும் பேத்திசுகம்!

..

அப் ‘பேர ‘ சுகம்தானே அவ்வயதின் ஆதாரம் ?

இப்போதும் அனுபவித்தே இக்கவிதை இழைக்கின்றேன்!

.

என்நண்பன் ‘கிச்சா ‘வும் ‘சுகக்கொள்ளை இது-என்பான்!

ஒன்பதைந்து வருடம்-அவன் அயல்நாட்டில் பணம்சேர்த்தான்!

..

டாலர்கள் சேர்த்தென்ன லாபம்பெற் றேன் ?என்பான்!

பாலகனை,அரவணைத்த பாசக் கிழவியினை,

..

பாவியேன் யான்-அங்கே பறிகொடுத்து விட்டுவந்தேன்;

ஆவிதான் போயினபின் அமெரிக்கா அழகாடா ?

..

அத்தனை எழில்தோட்டம்,அழகுமிகு மாளிகைகள்,

சொத்தெல்லாம் எனக்கொன்றும் சுகக்கொள்ளை தரலையடா!

..

அநாதையாய் நின்றேன்யான்!ஆச்சர்யம்! ஓரிரவில்,

கனாவில் வந்தார் ‘காஞ்சிமா முனிவர் ‘சொன்னார்;

..

உன்னைப்போல் அநாதையாய் ஒருகோடிக் குழந்தையிங்கே!

தென்னாட்டில் ‘பாலரில்லம் ‘ தேர்ந்தெடுத்து நடத்து!என்றார்; ‘ ‘—

.

பால வாக்கத்தில்(என்வீட்டருகில்)அநாதைப் பாலர்களைச்

சீலமுற வளர்த்து,அவன் சீராட்டி மகிழ்கின்றான்!

..

‘சொத்தெல்லாம் குழந்தைகட்கு!சுகக்கொள்ளை எனக்கெ ‘ன்பான்!

பெத்துப் போடாத பேரன்கள்என் தெய்வம் ‘என்பான்!

..

சொல்லுங்கள் கவிநண் ‘பீர் ‘! சுகக்கொள்ளை வெளியிலா ?

கல்லுக்குள் ‘தேரை ‘வந்தால், சுகம் எதற்கு ?கல்லுக்கா ?

****(கவியோகி வேதம்)

kaviyogi_vedham@yahoo.com

Series Navigation

author

கவியோகி வேதம்

கவியோகி வேதம்

Similar Posts